யாழிலுள்ள இடங்காட்டிகளின் அவலநிலை! பொதுமக்களின் வாகன வரிப் பணம் எங்கே?

யாழிலுள்ள இடங்காட்டிகளின் அவலநிலை! பொதுமக்களின் வாகன வரிப் பணம் எங்கே?

  • local
  • August 29, 2023
  • No Comment
  • 28

 இலங்கையில் எந்தப் பிரதேசங்களிலும் இல்லாதவாறு, யாழ்பாணத்திலுள்ள ஊர்களை அடையாளப்படுத்து பல பெயரப்பலகைகள் சிறைந்த நிலையில் காணப்படுவது, யாழ் மக்களை கவலையில் ஆழைத்திவருகின்றது.

கைதடி, சாவகச்சேரி, புலோப்பளை, வட்டக்கச்சி பெயர்ப்பலகைகள் சிதைந்து போயிருக்கின்றன.

பெயர்களை வாசித்தறிய முடியாதளவுக்கு சேதமானவையும் சில சேதமாகிக் கொண்டும் வருகின்றன.

இடங்களைத் தேடி வீதியில் பயணிக்கும் பயணிக்கு இத்தகைய பெயர்ப்பலகைகள் தெளிவாக இருப்பது அவசியம்.

இடங்களை குறியிட்டுச் சொல்லும் வழிகாட்டியாக பெயர்ப்பலகைகள் செயற்படுகின்றன.

சுற்றுலா துறையால் அதிக இலாபம் ஈட்டும் இலங்கை அரச இயந்திரம் இவற்றில் அக்கறையற்று இருப்பது பொறுப்பற்ற செயல்.

இடங்களை இலகுவாக இனங்காண முடிந்தாலே இடங்களைத் தேடி பயணிக்க விருப்பம் ஏற்படும்.

உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாத் துறைக்கு வீதிக்குறியீடுகளும் இடங்களை சுட்டிக்காட்டும் பெயர்ப் பலகைகளும் பெரிதும் உதவக்கூடியன.

வீதியினை பயன்படுத்துவதற்காக வாகனப்பாவனையாளர்களிடம் இருந்து பெறப்படும் வரிப்பணத்தில் இந்த வீதிக் கட்டமைப்புக்களை சீர் செய்வதற்கு பயன்படுத்தி இவற்றை சீர்செய்துகொள்ள வேண்டும். 

Related post

டேன் பிரியசாத் கொலை – இரு சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டனர்

டேன் பிரியசாத் கொலை – இரு சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டனர்

சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் கொல்லப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 2 சந்தேகநபர்களும் சாட்சியாளர்களால் இன்று அடையாளங்காட்டப்பட்டனர். இதற்கான அடையாள அணிவகுப்பு கொழும்பு பிரதான நீதவான்…
கொட்டாஞ்சேனை மாணவியின் மரணத்துடன் தொடர்புடைய ஆசிரியருக்கு கட்டாய  விடுமுறை

கொட்டாஞ்சேனை மாணவியின் மரணத்துடன் தொடர்புடைய ஆசிரியருக்கு கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனை சிறுமியின் மரணத்துடன் தொடர்புடைய ஆசிரியர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார். குறித்த ஆசிரியரைக் கட்டாய விடுமுறையில் அனுப்பியுள்ளதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. காவல்துறையால் வழங்கப்பட்ட B அறிக்கையின் பிரகாரம்…
ஆசிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் நிறைவேற்று சபைக்கூட்டம் இன்று

ஆசிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் நிறைவேற்று சபைக்கூட்டம் இன்று

ஆசிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் சங்கத்தின் நிறைவேற்று சபைக்கூட்டம் இன்று(09) கூடுகின்றது. பிலிப்பைன்ஸின் மணிலா நகரில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது. இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்னாயக்க…

Leave a Reply