யாழிலுள்ள இடங்காட்டிகளின் அவலநிலை! பொதுமக்களின் வாகன வரிப் பணம் எங்கே?

யாழிலுள்ள இடங்காட்டிகளின் அவலநிலை! பொதுமக்களின் வாகன வரிப் பணம் எங்கே?

  • local
  • August 29, 2023
  • No Comment
  • 57

 இலங்கையில் எந்தப் பிரதேசங்களிலும் இல்லாதவாறு, யாழ்பாணத்திலுள்ள ஊர்களை அடையாளப்படுத்து பல பெயரப்பலகைகள் சிறைந்த நிலையில் காணப்படுவது, யாழ் மக்களை கவலையில் ஆழைத்திவருகின்றது.

கைதடி, சாவகச்சேரி, புலோப்பளை, வட்டக்கச்சி பெயர்ப்பலகைகள் சிதைந்து போயிருக்கின்றன.

பெயர்களை வாசித்தறிய முடியாதளவுக்கு சேதமானவையும் சில சேதமாகிக் கொண்டும் வருகின்றன.

இடங்களைத் தேடி வீதியில் பயணிக்கும் பயணிக்கு இத்தகைய பெயர்ப்பலகைகள் தெளிவாக இருப்பது அவசியம்.

இடங்களை குறியிட்டுச் சொல்லும் வழிகாட்டியாக பெயர்ப்பலகைகள் செயற்படுகின்றன.

சுற்றுலா துறையால் அதிக இலாபம் ஈட்டும் இலங்கை அரச இயந்திரம் இவற்றில் அக்கறையற்று இருப்பது பொறுப்பற்ற செயல்.

இடங்களை இலகுவாக இனங்காண முடிந்தாலே இடங்களைத் தேடி பயணிக்க விருப்பம் ஏற்படும்.

உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாத் துறைக்கு வீதிக்குறியீடுகளும் இடங்களை சுட்டிக்காட்டும் பெயர்ப் பலகைகளும் பெரிதும் உதவக்கூடியன.

வீதியினை பயன்படுத்துவதற்காக வாகனப்பாவனையாளர்களிடம் இருந்து பெறப்படும் வரிப்பணத்தில் இந்த வீதிக் கட்டமைப்புக்களை சீர் செய்வதற்கு பயன்படுத்தி இவற்றை சீர்செய்துகொள்ள வேண்டும். 

Related post

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ் போதைப்பொருட்கள்  கைப்பற்றல்

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ்…

நாட்டிற்குள் நீண்ட நாட்களாக மீன்பிடி படகுகள்மூலம் கொண்டுவரப்பட்ட 23 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கடந்த 2 மாதங்களில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கடந்த ஏப்ரல் 05 ஆம்…
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது  தேவையற்றது

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது தேவையற்றது

செம்மணியில் உயிரிழந்த மக்களின் என்புக்கூடுகளை தேடிக் கடந்த காலத்தைத் தோண்டும் நடவடிக்கை, தற்போது தேவையற்ற விடயமாகும் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மாறாக, எதிர்காலத்தில் அவ்வாறான…
15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

நாளை(12) முதல் மின் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று(11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…

Leave a Reply