
இலங்கை விசா தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கை! கிடைத்தது அனுமதி
- local
- August 29, 2023
- No Comment
- 18
Back to Top
Timesoflk is committed to presenting news with factual accuracy, impartiality, and a focus on stories that matter to the Tamil-speaking population. It is considered a reliable source for staying informed about developments and issues affecting the Sri Lankan Tamil community.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் தற்போது வழங்கப்படும் விசா முறைமையை இலகுப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
1948ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டம் மற்றும் அதன் கீழ் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளுக்கு அமைய எமது நாட்டிற்கு வருகை தருகின்ற வெளிநாட்டவருக்கு குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தால் வருகை தரு விசா, வதிவிட விசா மற்றும் பயண விசா என 3 வகையான விசாக்கள் வழங்கப்படுகின்றன.
வருகை தரு விசா மற்றும் வதிவிட விசா ஆகிய 2 வகையான விசா முறைமையின் கீழ் வழங்கப்படுகின்ற விசா வகைகளில் காணப்படுகின்ற சிக்கலான தன்மையைக் கருத்தில் கொண்டு அதிகளவிலான வெளிநாட்டவர்களை கவர்ந்திழுக்கின்ற விசா முறைகளை கருத்திலெடுத்து எமது நாட்டில் நடைமுறையில் உள்ள விசா முறையை மீண்டும் மீளாய்வு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Bringing Sri Lanka’s Stories to the World – Your Trusted Source for Timely and Insightful News.
Copyright @ TimesofLK - 2021