நாட்டு மக்களுக்கு மத்திய வங்கியின் மகிழ்ச்சியான தகவல்

நாட்டு மக்களுக்கு மத்திய வங்கியின் மகிழ்ச்சியான தகவல்

  • Business
  • March 27, 2024
  • No Comment
  • 107

கடந்த ஆண்டின் கடைசி காலாண்டில் பதிவான 4.5 சதவீத பொருளாதார வளர்ச்சியுடன், அடுத்த 12 மாதங்களில் இலங்கை பொருளாதாரத்தில் சாதகமான வளர்ச்சி காணப்படும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இலங்கை மத்திய வங்கி இன்று(26) விசேட செய்தியாளர் மாநாட்டை நடத்தியதுடன், பொருளாதாரத்தின் தற்போதைய நிலை குறித்த உண்மைகளை வெளிப்படுத்தியது.

எட்டப்பட்ட முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு, மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதத்தை முறையே 8.5% மற்றும் 9.5% ஆக 50 அடிப்படை புள்ளிகளால் குறைக்க மத்திய வங்கி முடிவு செய்துள்ளது.

வருமானம்
சமீபத்திய மத்திய வங்கி அறிக்கைகளின்படி, பெப்ரவரி 2024 இறுதிக்குள் நாட்டின் உத்தியோகபூர்வ சொத்து கையிருப்பு 4.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது.
வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் இலங்கைக்கு கிடைத்த வெளிநாட்டுப் பணம் 964 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், அந்த 2 மாதங்களில் சுற்றுலாத்துறை மூலம் கிடைத்த வருமானம் 687 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

மேலும், 2024ல் இதுவரை டொலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு 6.7% அதிகமாக உள்ளது.

சம்பள அதிகரிப்பு
அத்தோடு, எதிர்காலத்தில் பணவீக்க விகிதம் 4% முதல் 5% வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடைந்த முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு, இலங்கை மத்திய வங்கி நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதத்தை முறையே 8.5% மற்றும் 9.5% ஆக 50 அடிப்படை புள்ளிகளால் குறைக்க முடிவு செய்துள்ளது.

இதன்போது, ​​மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான உண்மைகள் தொடர்பிலும் மத்திய வங்கி ஆளுநர் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related post

பன்டமிக்கின் போது குவாண்டாஸ் சட்டவிரோதமாக 1,700 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்தது – உச்ச நீதிமன்றம்

பன்டமிக்கின் போது குவாண்டாஸ் சட்டவிரோதமாக 1,700 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்தது –…

தொற்றுநோய்களின் போது சட்டவிரோதமாக 1,700 வேலைகளை அவுட்சோர்சிங் செய்ததாக குவாண்டாஸ் அளித்த தீர்ப்பை ரத்து செய்ய ஆஸ்திரேலியாவின் உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. 2020 நவம்பரில் 10 விமான நிலையங்களில்…
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அடுத்த மாதம் முதலாவது இலங்கை பாரிய வர்த்தக மற்றும் வர்த்தக மன்றம்

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அடுத்த மாதம் முதலாவது இலங்கை பாரிய வர்த்தக…

செப்., 22 வரை பதிவு துவக்கம் | அக்டோபர் 25 முதல் 29 வரை ராஸ் அல் கைமாவில் நிகழ்வு முதலாவது பாரிய வர்த்தக மற்றும் வர்த்தக மன்றம்…
ரிலையன்ஸ்க்கு கீழ இவ்ளோ கம்பெனி இருக்கா.. அதப்பத்தி உங்களுக்கு தெரியுமா?

ரிலையன்ஸ்க்கு கீழ இவ்ளோ கம்பெனி இருக்கா.. அதப்பத்தி உங்களுக்கு தெரியுமா?

ரிலையன்ஸ் நிறுவனத்தின் அங்கமான ரிலையன்ஸ் ரீடெயில் சமீபத்தில் பிரபலமாகி வருவதை அனைவரும் அறியலாம். அதிலும் ரிலையன்ஸ் ரீடெயில் தற்போது 85 சர்வதேச பிராண்டுகளை அதனுடன் வணிகத்திற்காக இணைத்துள்ளது. ரிலையன்ஸ்…

Leave a Reply