
50 வயதில் இரண்டாவது திருமணமா? நடிகை சுகன்யாவின் அதிரடி முடிவு
- Cinema
- August 22, 2023
- No Comment
- 21
Back to Top
Timesoflk is committed to presenting news with factual accuracy, impartiality, and a focus on stories that matter to the Tamil-speaking population. It is considered a reliable source for staying informed about developments and issues affecting the Sri Lankan Tamil community.
நடிகை சுகன்யா தனது இரண்டாவது திருமணம் குறித்து ஓபனாக பேசியுள்ள தகவல் தற்போது வைரலாகி வருகின்றது.
இப்படம் 1992ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் நெப்போலியன் நடிப்பில் நடித்து பிரபலமானார். தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் கலக்கிய இவர் 2002ம் ஆண்டு ஸ்ரீதர் ராஜகோபாலன் என்பவரை திருமணம் செய்தார்.
ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை ஒரு ஆண்டிலேயே முடிந்துள்ள நிலையில், சில தொலைக்காட்சி தொடரில் நடித்து வந்தார்.
அதாவது கணவருக்கு சினிமாவில் நடிப்பது பிடிக்காமல், பல கட்டுப்பாடுகளை விதித்ததால், அவரை விவாகரத்து செய்தவர், பின்பு இரண்டாவது திருமணம் குறித்து எந்தவொரு முடிவும் எடுக்காமல் வாழ்ந்து வருகின்றார்.
விவாகரத்துக்கு பின்பு நடிப்பதைக் குறைத்துக் கொண்ட சுகன்யா, சில படங்களில் நடித்து வந்தார். சேரன் இயக்கத்தில் கடந்த 2019ம் ஆண்டு வெளியான திருமணம் படத்தில் நடித்துள்ளார்.
விவாகரத்துக்கு பின்னர் 20 ஆண்டுகளாக சிங்கிளாகவே வாழ்ந்து வரும் நடிகை சுகன்யாவுக்கு தற்போது 50 வயது ஆகியுள்ள நிலையில் தனது இரண்டாவது திருமணம் குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.சுகன்யாவிடம் இரண்டாவது திருமணம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, அப்படியொரு எண்ணம் தனக்கு இல்லை… 50 வயதில் தற்போது திருமணம் செய்து குழந்தை என்று வந்தால், அந்த குழந்தை தன்னை அம்மா என்று அழைக்குமா? பாட்டி என்று அழைக்குமா? என்று யோசிப்பேன்.
ஆனால் இரண்டாவது திருமணம் வேண்டும் என்றும் சொல்லலை… வேண்டாம் என்றும் சொல்லலை என்று மலுப்பலாக பதில் கூறியுள்ளார். மேலும் தனது முதல் திருமணம் விவகாரத்தில் விவாகரத்து பெறுவதற்கு அதிக வருடங்கள் ஆனதாகவும் கூறியுள்ளார்.
Bringing Sri Lanka’s Stories to the World – Your Trusted Source for Timely and Insightful News.
Copyright @ TimesofLK - 2021