உக்ரைனின் இரத்த மாற்று மையத்தின் மீது ரஷ்யா குண்டு வீச்சு தாக்குதல்!

உக்ரைனின் இரத்த மாற்று மையத்தின் மீது ரஷ்யா குண்டு வீச்சு தாக்குதல்!

  • world
  • August 7, 2023
  • No Comment
  • 74

உக்ரைன் – ரஷ்ய போர் தீவிரமடைந்து வரும் நிலையில் உக்ரைனின் இரத்த மாற்று மையத்தின் மீது ரஷ்யா வான்வழி குண்டு தாக்குதலை நடத்தி அழித்துள்ளதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.

உக்ரைனின் கிழக்கு கார்கிவ் பகுதியின் குபியன்ஸ்க் நகரில் உள்ள இரத்த மாற்று மையத்தின் மீதே இவ்வாறு ரஷ்யா வான்வழி குண்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.

ரஷ்யாவின் இந்த திடீர் தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் ஜெலென்ஸ்கி தனது இரங்கலையும் தெரிவித்துள்ளார். போர் நிறுத்தம் குறித்த அமைதி பேச்சுவார்த்தை
மேலும், ரஷ்ய தாக்குதலினால் இரத்த மாற்று மையத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க மீட்பு படையினர் போராடி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனித்த இந்த போர் குற்றம் ரஷ்யாவின் அராஜகங்கள் குறித்தும், தான் வாழ்வதற்காக இந்த கொடிய மிருகம் அனைத்தையும் அழிக்கின்றது எனவும்,உயிர்களை மதிக்கும் அனைவரும் பயங்கரவாதிகளை தோற்கடிப்பது மரியாதைக்குரிய விடயம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, உக்ரைன் – ரஷ்ய போரினால் உலக நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், போர் நிறுத்தம் குறித்த அமைதி பேச்சுவார்த்தை 40 நாடுகளின் முக்கிய தலைவர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெறவுள்ளது.

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினும் கைது செய்யப்படுவாரா என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமெரிக்க…
கனடாவில்   கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. கனடாவில் ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற்ற…

Leave a Reply