உக்ரைனின் இரத்த மாற்று மையத்தின் மீது ரஷ்யா குண்டு வீச்சு தாக்குதல்!

உக்ரைனின் இரத்த மாற்று மையத்தின் மீது ரஷ்யா குண்டு வீச்சு தாக்குதல்!

  • world
  • August 7, 2023
  • No Comment
  • 16

உக்ரைன் – ரஷ்ய போர் தீவிரமடைந்து வரும் நிலையில் உக்ரைனின் இரத்த மாற்று மையத்தின் மீது ரஷ்யா வான்வழி குண்டு தாக்குதலை நடத்தி அழித்துள்ளதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.

உக்ரைனின் கிழக்கு கார்கிவ் பகுதியின் குபியன்ஸ்க் நகரில் உள்ள இரத்த மாற்று மையத்தின் மீதே இவ்வாறு ரஷ்யா வான்வழி குண்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.

ரஷ்யாவின் இந்த திடீர் தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் ஜெலென்ஸ்கி தனது இரங்கலையும் தெரிவித்துள்ளார். போர் நிறுத்தம் குறித்த அமைதி பேச்சுவார்த்தை
மேலும், ரஷ்ய தாக்குதலினால் இரத்த மாற்று மையத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க மீட்பு படையினர் போராடி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனித்த இந்த போர் குற்றம் ரஷ்யாவின் அராஜகங்கள் குறித்தும், தான் வாழ்வதற்காக இந்த கொடிய மிருகம் அனைத்தையும் அழிக்கின்றது எனவும்,உயிர்களை மதிக்கும் அனைவரும் பயங்கரவாதிகளை தோற்கடிப்பது மரியாதைக்குரிய விடயம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, உக்ரைன் – ரஷ்ய போரினால் உலக நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், போர் நிறுத்தம் குறித்த அமைதி பேச்சுவார்த்தை 40 நாடுகளின் முக்கிய தலைவர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெறவுள்ளது.

Related post

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு உச்சத்தை எட்டிய நிலையில் உலகபெரும் பணக்காரர் டிரம்ப் இணைந்துள்ளார். அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர்…
காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காசாவில் கடந்த மூன்று வாரங்களில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை, 2019 ஆம் ஆண்டு முதல் உலகின் யுத்த பிரதேசங்கிளில் உயிரிழந்தா குழந்தைகளின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது என்று…
இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் இஸ்லாமியர்களுக்கு தடை விதிப்பதாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு வெள்ளை மாளிகை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நேற்று…

Leave a Reply