
உங்கள் காலத்திலேயே தீர்வை காணுங்கள்! ஜனாதிபதியிடம் குமார வெல்கம வலிறுயுத்து
- local
- August 10, 2023
- No Comment
- 15
Back to Top
Timesoflk is committed to presenting news with factual accuracy, impartiality, and a focus on stories that matter to the Tamil-speaking population. It is considered a reliable source for staying informed about developments and issues affecting the Sri Lankan Tamil community.
அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு உங்களின் காலத்தில் தீர்வு காணுங்கள். இல்லையென்றால் எமது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் உட்பட எதிர்கால தலைமுறையினர் பாதிக்கப்படுவார்கள். அவ்வாறு நிகழ்ந்தால் நீங்கள் வாழ்ந்தாலும், இறந்தாலும் நிம்மதியாக இருக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பார்த்து தெரிவித்துள்ளார்.
13 ஆவது திருத்தம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று (09) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குமார வெல்கம எம்.பி குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,ஜனாதிபதி முன்வைத்துள்ள யோசனைகள்
“அரசமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி முன்வைத்துள்ள யோசனைகளை மீளாய்வு செய்வதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
சாதக மற்றும் பாதக விடயங்களை ஆராய்ந்து ஒரு தீர்மானத்தை அறிவிப்போம். அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நாங்கள் கொண்டு வரவில்லை நீங்கள் தான் (ஜனாதிபதியை நோக்கி) கொண்டு வந்தீர்கள்.இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜூவ் காந்தியுடன் இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போது நான் உட்பட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச புறக்கோட்டை அரச மரத்தடியில் போராட்டத்தில் ஈடுபட்டோம். போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பலர் இன்று உயிருடன் இல்லை.
அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு உங்களின் காலத்தில் (ஜனாதிபதியை நோக்கி) தீர்வு காணுங்கள். இல்லையென்றால் எங்களைப் போல் எமது பிள்ளைகள், பேரப்பிள்ளைகளும் எதிர்காலத்தில் தாக்குதலுக்கு உள்ளாகலாம். அவ்வாறு இடம்பெற்றால் நீங்கள் வாழ்ந்தாலும், இறந்தாலும் நிம்மதி இல்லாமல் போகும். ஆகவே, பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுங்கள் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றேன்.” என்றும் தெரிவித்துள்ளார்.
Bringing Sri Lanka’s Stories to the World – Your Trusted Source for Timely and Insightful News.
Copyright @ TimesofLK - 2021