Express Entry: 3,200 புலம்பெயர்வோருக்கு கனடா அழைப்பு

Express Entry: 3,200 புலம்பெயர்வோருக்கு கனடா அழைப்பு

  • local
  • September 21, 2023
  • No Comment
  • 24

கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு, எக்ஸ்பிரஸ் நுழைவுத்திட்டம் வாயிலாக 3,200 புலம்பெயர்வோருக்கு அழைப்பு விடுத்துள்ளது.

மீண்டும் துவக்கப்பட்ட எக்ஸ்பிரஸ் நுழைவுத்திட்டம்

எக்ஸ்பிரஸ் நுழைவுத்திட்டத்திற்கு சிறிது இடைவெளி விடப்பட்டிருந்த நிலையில், தற்போது, மீண்டும் அது துவக்கப்பட்டுள்ளது.

உண்மையில், இந்த கோடையில் அதிக அளவில் எக்ஸ்பிரஸ் நுழைவுத்திட்டம் வாயிலாக புலம்பெயர்வோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது என்றாலும், அவை எல்லாம் பல்வேறு பிரிவுகளுக்கென தனித்தனியாக நடத்தப்பட்டன.

உதாரணமாக, மருத்துவத்துறைக்கு தனியாக, போக்குவரத்துத் துறைக்குத் தனியாக, விவசாயத் துறைக்கு தனியாக என அழைப்புகள் விடுக்கப்பட்டன.

ஆனால், தற்போது மொத்தமாக அனைத்துத் துறையினருக்குமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எக்ஸ்பிரஸ் நுழைவுத்திட்டம் என்பது என்ன?

எக்ஸ்பிரஸ் நுழைவுத் திட்டம் என்பது, சில பொருளாதார புலம்பெயர்தல் திட்டங்களின் மூலம் கனடாவின் தொழிலாளர் காலியிடங்களை நிரப்புவதற்காக, கனேடிய நிரந்தர குடியிருப்பு விண்ணப்பங்களை நிர்வகிப்பதற்காக கனேடிய அரசு பயன்படுத்தும் ஒரு அமைப்பாகும்.

எக்ஸ்பிரஸ் நுழைவுத் திட்டமானது, விண்ணப்பதாரர்களின் சுயவிவரங்களை (profiles) தரவரிசைப்படுத்தும், Comprehensive Ranking System (CRS) என்னும் புள்ளிகள் அடிப்படையிலான ஒரு திட்டத்தைப் பயன்படுத்துகிறது.

அதிக புள்ளிகள் பெறுவோர், விண்ணப்பிப்பதற்கான அழைப்பு ஒன்றைப் பெறுவார்கள் (ITA). அதைத் தொடர்ந்து அவர்கள் நிரந்தர வாழிட உரிமம் கோரி விண்ணப்பிக்கலாம்.

அதைத் தொடர்ந்து, கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு, கைரேகை முதலான விடயங்களைப் பதிவு செய்ய கேட்டுக்கொள்வதுடன், நேர்காணலுக்கு ஏற்பாடு செய்யலாம், அல்லது, மேலதிக ஆவணங்களைக் கேட்கலாம்.

உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டதென்றால், கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு, அதை உறுதி செய்யும் விதத்தில் Confirmation of Permanent Residence (COPR) என்னும் ஆவணத்தை ஒன்றை உங்களுக்கு வழங்கும்.

விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிரந்தர வாழிட உரிம விண்ணப்பதாரர்கள் landing processஐ முடிக்கலாம். நீங்கள் கனடாவுக்கு வெளியில் இருந்தால்,

கனடாவில் குடியமர்வதற்கான முதல் படிகளைத் துவங்குவதற்காக, நுழைவுக்கு முந்தைய சேவைகளை ( pre-arrival services) துவக்கலாம்.

இம்முறை, Comprehensive Ranking System (CRS) என்னும் புள்ளிகள் அடிப்படையிலான திட்டத்துக்கான குறைந்தபட்ச புள்ளிகள் 531.

Related post

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…
2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க அமைச்சர்!

2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க…

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, குறித்த…

Leave a Reply