பல்கலைக்கழங்களில் அறிமுகமாகும் புதிய பாடநெறிகள்

பல்கலைக்கழங்களில் அறிமுகமாகும் புதிய பாடநெறிகள்

  • local
  • September 21, 2023
  • No Comment
  • 36

புதிய கல்வியாண்டில் பல்கலைக்கழகங்களில் பல பாடநெறிகள் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

தரவுசார் பட்டப்படிப்பு பாடநெறி சப்ரகமுவ பல்கலைக்கழத்தில் ஆரம்பிக்கப்படும். இதற்காக 50 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

ஆரம்பநிலை கல்வி தொடர்பான பாடநெறி ஆரம்பிக்கப்படவுள்ளதோடு இதற்காக 75 மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர்.

புதிய பாடநெறி

கொழும்பு மருத்துவ பீடத்தில் வைத்திய தொழில்நுட்பம் தொடர்பான புதிய பாடநெறி ஆரம்பிக்கப்படும். ஊவா வெல்லஸ்ஸ பல்கலைககழகத்தில் புதிதாக மருத்துவ பீடம் ஆரம்பிக்கப்படும். இதற்காக 50 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.

புதிய கல்வியாண்டில் பல்கலைக்கழகங்களில் இரண்டு புதிய பீடங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

கற்கை பிரிவுகள்

புதிதாக 20 கற்கை பிரிவுகள் ஆரம்பிக்கப்படும். புதிய கல்வியாண்டில் மருத்துவ பீடங்களுக்கு 615 மாணவர்கள் மேலதிகமாகவும் பொறியியல் பீடங்களுக்கு 480 மேலதிக மாணவர்களும் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.

நாட்டின் பல்கலைக்கழக கட்டமைப்பில் தற்போது 12 மருத்துவ பீடங்களும் ஆறு பொறியில் பீடங்களும் உள்ளதாக சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டார்.

Related post

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

நாளை(12) முதல் மின் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று(11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…
முப்படைகளிலிருந்து தப்பியோடிய 2,983 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முப்படைகளிலிருந்து தப்பியோடிய 2,983 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி முதல் மே மாதம் 30 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது அவர்கள் கைது செய்யப்பட்டதாக பாதுகாப்பு…
இன்றும் நாட்டின் பல பகுதிகளில்கடும் காற்று வீசும் அபாயம்

இன்றும் நாட்டின் பல பகுதிகளில்கடும் காற்று வீசும் அபாயம்

இன்றும் (2)நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடும் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தென்மேற்கு பருவக்காற்றின் தாக்கம் காரணமாக, பல இடங்களில் மணிக்கு 30 தொடக்கம்…

Leave a Reply