உலக கோப்பை 2023: இந்தியா – பாகிஸ்தான் போட்டிகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்

உலக கோப்பை 2023: இந்தியா – பாகிஸ்தான் போட்டிகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்

  • Sports
  • August 9, 2023
  • No Comment
  • 29

உலகக் கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கான திகதிகளில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

ஒருநாள் உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19ஆம் திகதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அட்டவணையை ஐசிசி சமீபத்தில் வெளியிட்டிருந்தது.

இந்த தொடரின் முக்கிய போட்டியாக கருதப்படும் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டி, அக்டோபர் 15-ஆம் திகதி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், அன்றைய தினம் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுவதால் பாதுகாப்பு வழங்குவதில் பிரச்சினை உள்ளதாக மாநில பொலிஸார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இலங்கை – பாகிஸ்தான் போட்டிகளில் மாற்றம்

இதனைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டிகள் ஒரு நாள் முன்னதாக அக்டோபர் 14-ஆம் தேதி நடத்து குறித்கு ஐசிசி மற்றும் பிசிசிஐ ஆலோசனை மேற்கொண்டது.

இதுகுறித்து கடிதம் ஒன்றையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு பிசிசிஐ தரப்பில் அனுப்பப்பட்டது. இந்நிலையில், போட்டியின் திகதியை மாற்ற பிசிசிஐ விடுத்த கோரிக்கையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்றுக் கொண்டுள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் போட்டிகள் அக்டோபர் 14-க்கு மாற்றம் செய்யப்படும் நிலையில், ஹைதராபாத்தில் அக்டோபர் 12-ஆம் திகதி பாகிஸ்தான் – இலங்கை அணிகள் மோதும் போட்டியும் மாற்றப்படவுள்ளது.

இந்த வார இறுதிக்குள் திருத்தப்பட்ட புதிய அட்டவணையை ஐசிசி வெளியிடவுள்ளது.

Related post

8வது முறையாக  உலகின் சிறந்த வீரர் விருதை வென்ற ‘மெஸ்ஸி’

8வது முறையாக உலகின் சிறந்த வீரர் விருதை வென்ற ‘மெஸ்ஸி’

சிறந்த வீரருக்கான பலோன் டி’ஆர் விருதை அர்ஜெண்டினா அணியின் நட்சத்திர வீரர் ‘லயோனல் மெஸ்ஸி’ 8வது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார். சிறந்த வீரர் கடந்த 1956 முதல்…
இலங்கையின் உலக கிண்ண  அணிக்கு அழைக்கப்பட்டுள்ள இரு வீரர்கள்!

இலங்கையின் உலக கிண்ண அணிக்கு அழைக்கப்பட்டுள்ள இரு வீரர்கள்!

இலங்கை அணியின் நட்சத்திர வீரர் ஏஞ்சலோ மெத்யூஸ் மற்றும் துஷ்மந்த சமீரா ஆகியோர் உலகக்கிண்ண போட்டிகளில் விளையாடும் இலங்கை அணிக்கு மேலதிக வீரர்களாக அழைக்கப்பட்டுள்ளன. இந்த அழைப்பு இலங்கையின்…
இலங்கை அணியின் வீரர் குசல் மெண்டிஸ் வைத்தியசாலையில் அனுமதி

இலங்கை அணியின் வீரர் குசல் மெண்டிஸ் வைத்தியசாலையில் அனுமதி

இலங்கை அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக நேற்று(10.10.2023) இடம்பெற்ற போட்டியில் குசல் மெண்டிஸ் சதம் அடித்து சாதனை படைத்திருந்தார்.வரலாற்று சாதனைஇந்நிலையில்,…

Leave a Reply