எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் சினோபெக் விடுத்த கோரிக்கை

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் சினோபெக் விடுத்த கோரிக்கை

  • local
  • August 11, 2023
  • No Comment
  • 19

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலையை விட குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு சினோபெக் எண்ணெய் நிறுவனம் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலையை விடவும் ஒவ்வொரு ரக எரிபொருளுக்கும் லீற்றருக்கு 3 ரூபாய் குறைத்து விற்பனை செய்வதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் அந்த கோரிக்கைக்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறித்த கோரிக்கைக்கு இன்னும் பதிலளிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

130 எரிபொருள் நிலையங்கள்
சினோபெக்கிற்கு இலங்கையில் 130 எரிபொருள் நிலையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 20 எரிபொருள் நிலையங்களை சினோபெக்கிற்கு வழங்க அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.

இந்நிலையில் சினோபெக் நிறுவனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருள் விநியோகத்தை ஆரம்பிக்க இன்னும் இரண்டு வாரங்கள் செல்லும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Related post

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…
2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க அமைச்சர்!

2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க…

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, குறித்த…

Leave a Reply