நாட்டில் அதிகரிக்கும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்

நாட்டில் அதிகரிக்கும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்

  • local
  • August 23, 2023
  • No Comment
  • 33

இந்த ஆண்டு ஜனவரி முதல் இதுவரை நாடு முழுவதும் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் குறைந்தது 36 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 28 பேர் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தக் காலப் பகுதியில் 60 இற்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்
குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் அதிக எண்ணிக்கையிலானவை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுக்கு இடையிலான மோதல்களில் இடம்பெற்றவையாகும்.எவ்வாறாயினும், சில துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுக்கு தனிப்பட்ட தகராறுகளும் காரணமாக இருந்துள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழப்பு மற்றும் காயமடைதல் சம்பவங்கள் தவிர, ஆறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் எந்தவித உயிரிழப்புகளும் அல்லது காயங்களும் இல்லாமல் பதிவாகியுள்ளன என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்

Related post

சுகாதார உத்தியோகத்தர்களுக்கான புதிய  திட்டம்

சுகாதார உத்தியோகத்தர்களுக்கான புதிய திட்டம்

சுகாதார உத்தியோகத்தர்களின் உடல் மற்றும் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் விசேட திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் முதற்கட்டமாக, சுகாதார அமைச்சில் நிறுவப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தை…
மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…

Leave a Reply