
நடமாடும் சுடுகாட்டில் தகனம் செய்யப்படும் ரஷ்ய இராணுவ வீரர்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்
- world
- August 7, 2023
- No Comment
- 18
Back to Top
Timesoflk is committed to presenting news with factual accuracy, impartiality, and a focus on stories that matter to the Tamil-speaking population. It is considered a reliable source for staying informed about developments and issues affecting the Sri Lankan Tamil community.
ரஷ்யா தன் தரப்பு இழப்புகளை மறைப்பதற்காக,போரில் உயிரிழக்கும் இராணுவ வீரர்களை நடமாடும் சுடுகாட்டில் தகனம் செய்துவிடுவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
உயிரிழந்த இராணுவ வீரர்களின் உடல்களை ரஷ்யா உக்ரைனில் வைத்தே தகனம் செய்துவிடுவதாகவும் உக்ரைன் இராணுவ தரப்பு தெரிவித்துள்ளது.
ரஷ்ய ஆக்கிரமிப்பின் கீழ் இருக்கும் உக்ரைன் நகரமான Melitopolஇல் ஒரு நடமாடும் தகன வாகனம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் உயிரிழந்த ரஷ்ய இராணுவ வீரர்களின் உடல்கள் ட்ரக்குகள் மூலம் அங்கு கொண்டு வரப்படுவதாகவும், அங்கு வைத்தே அந்த உடல்கள் தகனம் செய்யப்படுவதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.
குறிப்பாக இரவு நேரங்களில் பிணவாடை வீசிக்கொண்டே இருப்பதாக உள்ளூர் மக்கள் புகார் கூறுவதாகவும் உக்ரைன் இராணுவம் வெளியிடப்பட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Bringing Sri Lanka’s Stories to the World – Your Trusted Source for Timely and Insightful News.
Copyright @ TimesofLK - 2021