உக்ரைனின் தாக்குதலினால் திணறும் ரஷ்யா! அவசர அவசரமாக மூடப்படும் விமான நிலையங்கள்

உக்ரைனின் தாக்குதலினால் திணறும் ரஷ்யா! அவசர அவசரமாக மூடப்படும் விமான நிலையங்கள்

  • world
  • August 21, 2023
  • No Comment
  • 17

உக்ரைன் இராணுவத்தின் ட்ரோன் தாக்குதலுக்கு பயந்து மாஸ்கோ நகரில் இரண்டு விமான நிலையங்களை ரஷ்யா அவசரமாக மூடியுள்ளது.

இராணுவ விமானத்தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த சூப்பர்சோனிக் அணு குண்டுவீச்சு விமானமொன்று ட்ரோன் தாக்குதலில் சேதமடைந்த நிலையில் ரஷ்யா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதேவேளை, தலைநகர் மாஸ்கோவில் செயல்பட்டு வரும் Domodedovo மற்றும் Vnukovo விமான நிலையங்களை தற்காலிகமாக மூடப்படுவதுடன் அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த இரு விமான நிலையங்களில் அனைத்து சேவைகளும் முடக்கப்பட்ட நிலையில், 50 மைல்கள் தொலைவில் உள்ள Sheremetyevo விமான நிலையத்திற்கு விமானங்கள் திருப்பிவிடப்பட்டுள்ளன.உக்ரைனில் தீவிரமடையும் பயங்கரவாத தாக்குதல்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் விலையுயர்ந்த போர் விமானம் ஒன்று ட்ரோன் தாக்குதலில் சேதமடைந்துள்ளதை அடுத்தே ரஷ்ய அதிகாரிகள் இந்த முடிவினை அறிவித்துள்ளனர்.

உக்ரைனில் இருந்து சுமார் 700 மைல்கள் தொலைவில் அமைந்துள்ள இராணுவ விமான நிலையத்திலேயே அந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


மேலும், தாக்குதலில் சேதமடைந்த போர் விமானத்தை உடனடியாக இன்னொரு பகுதிக்கு மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதலை அடுத்து, உக்ரைன் பயங்கரவாத தாக்குதலை முன்னெடுக்க துவங்கியுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் குற்றஞ்சாட்டியுள்ளது.

Related post

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு உச்சத்தை எட்டிய நிலையில் உலகபெரும் பணக்காரர் டிரம்ப் இணைந்துள்ளார். அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர்…
காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காசாவில் கடந்த மூன்று வாரங்களில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை, 2019 ஆம் ஆண்டு முதல் உலகின் யுத்த பிரதேசங்கிளில் உயிரிழந்தா குழந்தைகளின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது என்று…
இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் இஸ்லாமியர்களுக்கு தடை விதிப்பதாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு வெள்ளை மாளிகை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நேற்று…

Leave a Reply