அடுத்த வாரம் ஜெர்மனிக்கு செல்லும்  ஜனாதிபதி

அடுத்த வாரம் ஜெர்மனிக்கு செல்லும் ஜனாதிபதி

  • world
  • September 25, 2023
  • No Comment
  • 23

pic credits : dreamstime.com

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க கியூபாவிலிருந்து நாடு திரும்பிய நிலையில் அடுத்த வாரம் ஜேர்மனிக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பேர்லின் உலகளாவிய உரையாடலின் முதல் நாளில் தலைவர்களின் கலந்துரையாடலில் பங்கேற்று ரணில் விக்ரசிங்க உரையாற்றவுள்ளார்.

கியூபாவில் நடைபெற்ற G77 உச்சி மாநாடு மற்றும் ஐ.நா பொதுச் சபை அமர்வுகளில் கலந்து கொண்ட அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்று (24)நாடு திரும்பியிருந்தார்.

உத்தியோகபூர்வ விஜயம்

இந்த நிலையில் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜேர்மன் செல்லும் ரணில் விக்ரமசிங்க, ஜேர்மன் சான்ஷிலர் ஓலாப் ஸ்சொட்ஸ் மற்றும் ஏனைய அரசியல் மற்றும் வர்த்தக தலைவர்களை சந்திக்கவுள்ளார்.

தற்போதைய புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார சவால்களை தீர்க்கும் ஜேர்மனியின் உயர்மட்ட உலகளாவிய முயற்சியாக ஆரம்ப பேர்லின் உலகளாவிய உரையாடல் அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அமைச்சரவைக் கூட்டம்

ஜேர்மன் சான்ஷிலர் ஓலாப் ஸ்சொட்ஸ்சை தவிர ஐரோப்பிய பேரவை தலைவர் சார்ள்ஸ் மைக்கேல் மற்றும் பெல்ஜிய பிரதமர் அலெக்ஸ்சாண்டர் டி குரூய் ஆகியோர் இந்த உரையாடலில் பங்கேற்கவுள்ளனர்.

அதிபரின் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க, வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன, அதிபரின் மூத்த ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க மற்றும் நிதியமைச்சரின் ஆலோசகர் தேஷால் டி மெல் ஆகியோர் பெர்லினில் இரண்டு நாள் தங்கியிருக்கும் போது ஜேர்மனின் சக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

இதேவேளை அதிபர் ரணில் விக்கிரமசிங்க நாளைய(25) அமைச்சரவைக் கூட்டத்திற்கு தலைமை தாங்கவுள்ளார். 

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் இரண்டாம் தவணைக்கான நிதியை வழங்குவது தொடர்பான மீளாய்வுகளுக்காக இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளையும் அதிபர் ரணில் விக்ரமசிங்க சந்திக்கவுள்ளார்.

Related post

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு உச்சத்தை எட்டிய நிலையில் உலகபெரும் பணக்காரர் டிரம்ப் இணைந்துள்ளார். அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர்…
காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காசாவில் கடந்த மூன்று வாரங்களில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை, 2019 ஆம் ஆண்டு முதல் உலகின் யுத்த பிரதேசங்கிளில் உயிரிழந்தா குழந்தைகளின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது என்று…
இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் இஸ்லாமியர்களுக்கு தடை விதிப்பதாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு வெள்ளை மாளிகை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நேற்று…

Leave a Reply