‘அரசியல் தீர்வு விவகாரத்தில் மாற்றம்’ – சம்பந்தன் எடுத்த நடவடிக்கை

‘அரசியல் தீர்வு விவகாரத்தில் மாற்றம்’ – சம்பந்தன் எடுத்த நடவடிக்கை

  • local
  • August 4, 2023
  • No Comment
  • 78
அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் இந்திய பயணத்தின் பின்னர் நடத்திய சர்வகட்சி கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்களின் அடிப்படையிலும், அரசியல் தீர்வு விவகாரத்தில் ஏற்பட்டுள்ள தேக்க நிலைமை தொடர்பிலும், அதில் மாற்றம் தேவை என்ற அடிப்படையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளிவிவகார செயலாளர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் ஆகியோருக்கு தான் எழுதிய கடிதம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இந்தக் கடிதம் நேற்று அவர்களிடம் சேர்க்கப்பட்டுள்ளதாக இந்திய தூதரக அதிகாரிகள் தன்னிடம் உறுதிப்படுத்தினர் என சம்பந்தன் கூறியுள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி ஆகியவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்களை இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே நேற்று முன்தினம் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இந்தச் சந்திப்பின்போதே இரா. சம்பந்தனால் இந்திய தூதரிடம் இக் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.

அரசியல் தீர்வு ஸ்தம்பிதம்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசியல் தீர்வு விவகாரத்தில் ஸ்தம்பித நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 36 ஆண்டுகள் கடந்துள்ளது. அதில் உள்ள 13 ஆவது திருத்தம் அதிமுக்கியத்துவம் வாய்ந்தது.

இந்திய – இலங்கை ஒப்பந்தமும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதேவேளை 13ஆவது திருத்தத்தில் உள்ள பரிந்துரைகளும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.

அரசியல் தீர்வு ஸ்தம்பிதம் அடைந்துள்ள நிலையில், அதில் கட்டாயம் மாற்றம் தேவை என வலியுறுத்தி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன். இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கும் பிரதியிட்டுள்ளேன்” – என்றார்.

Related post

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…
வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில்…

Leave a Reply