‘அரசியல் தீர்வு விவகாரத்தில் மாற்றம்’ – சம்பந்தன் எடுத்த நடவடிக்கை

‘அரசியல் தீர்வு விவகாரத்தில் மாற்றம்’ – சம்பந்தன் எடுத்த நடவடிக்கை

  • local
  • August 4, 2023
  • No Comment
  • 62
அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் இந்திய பயணத்தின் பின்னர் நடத்திய சர்வகட்சி கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்களின் அடிப்படையிலும், அரசியல் தீர்வு விவகாரத்தில் ஏற்பட்டுள்ள தேக்க நிலைமை தொடர்பிலும், அதில் மாற்றம் தேவை என்ற அடிப்படையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளிவிவகார செயலாளர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் ஆகியோருக்கு தான் எழுதிய கடிதம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இந்தக் கடிதம் நேற்று அவர்களிடம் சேர்க்கப்பட்டுள்ளதாக இந்திய தூதரக அதிகாரிகள் தன்னிடம் உறுதிப்படுத்தினர் என சம்பந்தன் கூறியுள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி ஆகியவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்களை இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே நேற்று முன்தினம் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இந்தச் சந்திப்பின்போதே இரா. சம்பந்தனால் இந்திய தூதரிடம் இக் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.

அரசியல் தீர்வு ஸ்தம்பிதம்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசியல் தீர்வு விவகாரத்தில் ஸ்தம்பித நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 36 ஆண்டுகள் கடந்துள்ளது. அதில் உள்ள 13 ஆவது திருத்தம் அதிமுக்கியத்துவம் வாய்ந்தது.

இந்திய – இலங்கை ஒப்பந்தமும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதேவேளை 13ஆவது திருத்தத்தில் உள்ள பரிந்துரைகளும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.

அரசியல் தீர்வு ஸ்தம்பிதம் அடைந்துள்ள நிலையில், அதில் கட்டாயம் மாற்றம் தேவை என வலியுறுத்தி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன். இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கும் பிரதியிட்டுள்ளேன்” – என்றார்.

Related post

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ் போதைப்பொருட்கள்  கைப்பற்றல்

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ்…

நாட்டிற்குள் நீண்ட நாட்களாக மீன்பிடி படகுகள்மூலம் கொண்டுவரப்பட்ட 23 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கடந்த 2 மாதங்களில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கடந்த ஏப்ரல் 05 ஆம்…
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது  தேவையற்றது

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது தேவையற்றது

செம்மணியில் உயிரிழந்த மக்களின் என்புக்கூடுகளை தேடிக் கடந்த காலத்தைத் தோண்டும் நடவடிக்கை, தற்போது தேவையற்ற விடயமாகும் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மாறாக, எதிர்காலத்தில் அவ்வாறான…
15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

நாளை(12) முதல் மின் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று(11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…

Leave a Reply