விமான நிலையத்தில் ஏழு அடுக்கு பாதுகாப்பை மீறிய யாழ் இளைஞன் – சென்னை விமான நிலையத்தில் குழப்பம்

விமான நிலையத்தில் ஏழு அடுக்கு பாதுகாப்பை மீறிய யாழ் இளைஞன் – சென்னை விமான நிலையத்தில் குழப்பம்

  • local
  • August 17, 2023
  • No Comment
  • 72

சென்னை விமான நிலையத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஏழு அடுக்கு பாதுகாப்பையும் மீறி நுழைந்த யாழ்ப்பாண இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக சென்னை விமான நிலையத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஏழு அடுக்கு பாதுகாப்பையும் மீறி நுழைந்தமையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறப்பு சோதனை
இந்த இளைஞன் திங்கட்கிழமை (14) இரவு விமானடிக்கெட், சிறப்பு அனுமதி அட்டை எதுவும் இல்லாமல், விமான நிலையத்தின் பாதுகாப்பு சோதனை, சுங்கச் சோதனை ஆகிய பகுதிகளைக் கடந்து, குடியுரிமை சோதனை நடக்கும் இடத்தில் சுற்றித்திரிந்துள்ளார்.

இதன் பின்னர் இரவு 10 மணி அளவில் குடியுரிமை அலுவலக கவுன்ட்டர் பகுதியில் ஊழியர் ஒருவரின் கையடக்க தொலைபேசியை திருட முயன்றதையடுத்து, அந்த இளைஞனை பிடித்து அதிகாரிகள், விமான நிலையமேலாளர் அறையில் ஒப்படைத்துள்ளனர்.

இதன்போது விசாரணையில், அவர் இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த தினேஷ் ஞானசூரியன் (35) என்பதும், 3 மாத விசாவில் இலங்கையிலிருந்து சென்னை வந்திருப்பதும் தெரியவந்துள்ளது.

Related post

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…
வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில்…

Leave a Reply