விமான நிலையத்தில் ஏழு அடுக்கு பாதுகாப்பை மீறிய யாழ் இளைஞன் – சென்னை விமான நிலையத்தில் குழப்பம்

விமான நிலையத்தில் ஏழு அடுக்கு பாதுகாப்பை மீறிய யாழ் இளைஞன் – சென்னை விமான நிலையத்தில் குழப்பம்

  • local
  • August 17, 2023
  • No Comment
  • 22

சென்னை விமான நிலையத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஏழு அடுக்கு பாதுகாப்பையும் மீறி நுழைந்த யாழ்ப்பாண இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக சென்னை விமான நிலையத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஏழு அடுக்கு பாதுகாப்பையும் மீறி நுழைந்தமையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறப்பு சோதனை
இந்த இளைஞன் திங்கட்கிழமை (14) இரவு விமானடிக்கெட், சிறப்பு அனுமதி அட்டை எதுவும் இல்லாமல், விமான நிலையத்தின் பாதுகாப்பு சோதனை, சுங்கச் சோதனை ஆகிய பகுதிகளைக் கடந்து, குடியுரிமை சோதனை நடக்கும் இடத்தில் சுற்றித்திரிந்துள்ளார்.

இதன் பின்னர் இரவு 10 மணி அளவில் குடியுரிமை அலுவலக கவுன்ட்டர் பகுதியில் ஊழியர் ஒருவரின் கையடக்க தொலைபேசியை திருட முயன்றதையடுத்து, அந்த இளைஞனை பிடித்து அதிகாரிகள், விமான நிலையமேலாளர் அறையில் ஒப்படைத்துள்ளனர்.

இதன்போது விசாரணையில், அவர் இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த தினேஷ் ஞானசூரியன் (35) என்பதும், 3 மாத விசாவில் இலங்கையிலிருந்து சென்னை வந்திருப்பதும் தெரியவந்துள்ளது.

Related post

டேன் பிரியசாத் கொலை – இரு சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டனர்

டேன் பிரியசாத் கொலை – இரு சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டனர்

சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் கொல்லப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 2 சந்தேகநபர்களும் சாட்சியாளர்களால் இன்று அடையாளங்காட்டப்பட்டனர். இதற்கான அடையாள அணிவகுப்பு கொழும்பு பிரதான நீதவான்…
கொட்டாஞ்சேனை மாணவியின் மரணத்துடன் தொடர்புடைய ஆசிரியருக்கு கட்டாய  விடுமுறை

கொட்டாஞ்சேனை மாணவியின் மரணத்துடன் தொடர்புடைய ஆசிரியருக்கு கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனை சிறுமியின் மரணத்துடன் தொடர்புடைய ஆசிரியர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார். குறித்த ஆசிரியரைக் கட்டாய விடுமுறையில் அனுப்பியுள்ளதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. காவல்துறையால் வழங்கப்பட்ட B அறிக்கையின் பிரகாரம்…
ஆசிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் நிறைவேற்று சபைக்கூட்டம் இன்று

ஆசிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் நிறைவேற்று சபைக்கூட்டம் இன்று

ஆசிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் சங்கத்தின் நிறைவேற்று சபைக்கூட்டம் இன்று(09) கூடுகின்றது. பிலிப்பைன்ஸின் மணிலா நகரில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது. இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்னாயக்க…

Leave a Reply