
வீடொன்றில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண் – மகள் வழங்கிய தகவல்
- local
- August 8, 2023
- No Comment
- 25
Back to Top
Timesoflk is committed to presenting news with factual accuracy, impartiality, and a focus on stories that matter to the Tamil-speaking population. It is considered a reliable source for staying informed about developments and issues affecting the Sri Lankan Tamil community.
அக்மீமன, ஹியார் பிரதேசத்தில் வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் 47 வயதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த சந்தேகநபர் நேற்று(06.08.2023) காலை வேயங்கொட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக அக்மீமன பொலிஸார் தெரிவித்தனர்.இந்நிலையில் உயிரிழந்த பெண் அக்மீமன, ஹியாரே பகுதியை சேர்ந்த 65 வயதுடைய பெண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெண்ணின் சடலம்சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் மகள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கமைய, இது தெரியவந்துள்ளது.பின்னர் விசாரணையில் அவர் அணிந்திருந்த நகை மற்றும் காதணிகளை யாரோ எடுத்துச் சென்றது தெரியவந்தது.மேலும், அவரது முகத்திலும் காயம் இருந்ததை அவதானித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Bringing Sri Lanka’s Stories to the World – Your Trusted Source for Timely and Insightful News.
Copyright @ TimesofLK - 2021