சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு அரசாங்கத்தின் புதிய கடன் திட்டம்!

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு அரசாங்கத்தின் புதிய கடன் திட்டம்!

  • local
  • October 25, 2023
  • No Comment
  • 85

சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மேம்படுத்தும் வகையில் புதிய கடன் திட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இத்திட்டத்திற்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணங்கியுள்ளத அரசாங்கம் கூறியுள்ளது.

இந்தக் கடன் தொகையை பெற்றுக்கொள்வதற்கு உரிய உடன்படிக்கைகளை மேற்கொள்வதற்காக நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் சமர்ப்பித்த யோசனையில் அமைவாக இந்த திட்டம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

165 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி
ஆசிய அபிவிருத்தி வங்கியின் 165 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியுடன் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு மானிய வட்டி விகிதத்தில் முதலீடு மற்றும் செயற்பாட்டு மூலதனக் கடன்களை வழங்குவதற்காக அரசாங்கம் “சிறு மற்றும் நடுத்தர நிறுவன கடன் திட்டத்தை” நடைமுறைப்படுத்தியுள்ளது.

மேலும், பணப்புழக்க அடிப்படையிலான கடன்களை விட, பிணைய அடிப்படையிலான கடன்களுக்கு வங்கிகள் முன்னுரிமை அளிப்பதால், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்குத் தீர்வாக, தேசிய கடன் பாதுகாப்பு முகமை நிறுவ தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன எனவும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், தங்கள் தொழில்களுக்கு நிதி திரட்டுவதில் சிரமம் உள்ள தொழில்முனைவோருக்காக இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

Related post

சுகாதார உத்தியோகத்தர்களுக்கான புதிய  திட்டம்

சுகாதார உத்தியோகத்தர்களுக்கான புதிய திட்டம்

சுகாதார உத்தியோகத்தர்களின் உடல் மற்றும் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் விசேட திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் முதற்கட்டமாக, சுகாதார அமைச்சில் நிறுவப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தை…
மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…

Leave a Reply