தீவிரமடையும் ரஷ்ய வெடிகுண்டு தாக்குதல்: தொடரும் ஏவுகணை தாக்குதல்

தீவிரமடையும் ரஷ்ய வெடிகுண்டு தாக்குதல்: தொடரும் ஏவுகணை தாக்குதல்

  • world
  • August 14, 2023
  • No Comment
  • 49

உக்ரைன் – ரஷ்ய போர் மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில் இன்று ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் பிறந்து 23 நாட்களேயான குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

ரஷ்யாவிற்கு பதிலடியாக கெர்சனின் மேற்கு பகுதிகளை கடந்த நவம்பர் மாதம் மீண்டும் உக்ரைன் படைகள் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தனர்.

இந்நிலையில், டினிப்ரோ ஆற்றின் கரைக்கு அப்பால் இருந்து அப்பகுதிகளை ரஷ்ய வீரர்கள் தொடர்ந்து ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.ரஷ்யா வெடிகுண்டு தாக்குதல்
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை கெர்சனின் ஷிரோகா பால்கா கிராமத்தில் உள்ள வீடொன்றின் மீது ரஷ்யா வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக உள்துறை அமைச்சர் இகோர் கிளிமென்கோ தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலில் பிறந்து 23 நாட்களேயான குழந்தை மற்றும் அவரது 12 வயது சகோதரர் மற்றும் அவரது பெற்றோர் என மொத்தம் 7 பேர் ரஷ்யாவின் இந்த வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.

ஸ்டானிஸ்லாவ் அருகே உள்ள மற்றொரு கிராமத்திலும் ரஷ்யாவின் தாக்குதலால் 2 பேர் உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தீவிரவாதிகள் கட்டாயமாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும், அவர்கள் படைகள் கொண்டு தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என கிளிமென்கோ குறிப்பிட்டுள்ளார்.

Related post

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கொண்டு வந்துள்ள, வரி மற்றும் செலவு யோசனைக்கு, ஈலோன் மஸ்க் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதற்கிடையே, ட்ரம்பின் இந்த யோசனை அமெரிக்க செனட்…
இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பமான நாள் இதுவாகும், மேலும் வெப்பநிலை தொடர்ந்து பதிவு செய்யப்படுவதால், இது குறித்த புதுப்பிப்புகள்உறுதியாகவும் வேகமாகவும் பெறப்படுகின்றன. சமீபத்திய அதிகபட்ச வெப்பநிலை கென்ட்டின்…
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனிக்கு 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளர் . இன்று (11) காலை பிரண்டென்பேர்க் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .…

Leave a Reply