நைஜரில் ஜனநாயக ஆட்சி கவிழ்ப்பு! அதிகாரத்தை கைப்பற்றி அதிரடி காட்டும் இராணுவம்

நைஜரில் ஜனநாயக ஆட்சி கவிழ்ப்பு! அதிகாரத்தை கைப்பற்றி அதிரடி காட்டும் இராணுவம்

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் ஜனநாயக ஆட்சியைக் கவிழ்த்து, இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது.

இந்த நிலையில் ஜனாதிபதி முகமது பாசும் (Mohamed Bazoum) கைது செய்யப்பட்டுள்ளார்.இந்நிலையில், பதவி நீக்கப்பட்ட ஜனாதிபதி Mohamed Bazoum ஐ மீண்டும் அப்பதவியில் அமர்த்துவதற்காக விடுக்கப்பட்டுவரும் அழுத்தங்களுக்கு அடிபணியபோவதில்லை என்று நைஜர் இராணுவ ஆட்சி தலைவர் அறிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை கண்டனம்

இதற்கு ஐக்கிய நாடுகள் சபையும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.இந்நிலையில், இராணுவ ஜெனரல் Abdourahamane Tiani,தேசிய தொலைக்காட்சியில் உரையாற்றிய போது, தங்களது உள்நாட்டு விவகாரத்தில் அண்டை நாடுகள், சர்வதேச சமூகங்கள் தலையிட வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளார்.மேலும், இராணுவப்புரட்சியை அடுத்து நைஜருக்கு மின் விநியோகத்தை அண்டை நாடான நைஜீரியா நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


Related post

போரில் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களின் நினைவாக வேல்ஸ் இளவரசி அஞ்சலி .

போரில் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களின் நினைவாக வேல்ஸ் இளவரசி அஞ்சலி .

இளவரசர் வில்லியமும் கேத்தரினும் அபேயை விட்டு வெளியேறி, கிரேட் வெஸ்ட் டோரில் உள்ள இன்னசென்ட் பாதிக்கப்பட்டவர்களின் நினைவிடத்தில் மலர்களை வைத்துள்ளனர். உலகம் முழுவதும் மரணம், சித்திரவதை மற்றும் ஒடுக்குமுறையால்…
அமெரிக்கா , பிரித்தானியா வரி குறைப்பு ஒப்பந்தம் இன்று அறிவிப்பு

அமெரிக்கா , பிரித்தானியா வரி குறைப்பு ஒப்பந்தம் இன்று அறிவிப்பு

அமெரிக்காவும் பிரித்தானியாவும் இன்று வரிகளைக் குறைப்பதற்கான ஒப்பந்தத்தை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றது முதல், பல நாடுகள் மீது பரஸ்பர வரிகளை அதிகரித்துள்ளார்.…
பாப்பரசரின் முதற்கட்ட  தெரிவு  தீர்மானம் இன்றி முடிவு .

பாப்பரசரின் முதற்கட்ட தெரிவு தீர்மானம் இன்றி முடிவு .

புதிய பரிசுத்த பாப்பரசரை தெரிவு செய்வதற்கான முதல்சுற்று வாக்கெடுப்பு தீர்மானமின்றி நிறைவடைந்துள்ளது. கத்தோலிக்க மக்கள் உள்ளிட்ட முழு உலகமும் கவனம் செலுத்தியுள்ள கொன்கிலேவ் எனப்படும் பரிசுத்த பாப்பரசரை தெரிவு…

Leave a Reply