பைடனுக்கு கொலை மிரட்டல்: ட்ரம்பின் ஆதரவாளர் சுட்டுக் கொலை

பைடனுக்கு கொலை மிரட்டல்: ட்ரம்பின் ஆதரவாளர் சுட்டுக் கொலை

  • world
  • August 11, 2023
  • No Comment
  • 36

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்களும், தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனின் ஆதரவாளர்களும் சமூக வலைத்தளங்களில் கடுமையான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

அதில் அமெரிக்காவின் உடா மாநிலத்தை சேர்ந்த க்ரெய்க் ராபர்ட்ஸன் என்ற ட்ரம்பின் ஆதரவாளர் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் ஜனாதிபதி பைடனை குறித்து தீவிரமான கருத்துக்களை பதிவு செய்திருந்தார்.

சர்ச்சைக்குறிய முகநூல் பதிவு
பைடன் தொடர்பில் கடந்த 2022ம் ஆண்டு இவர் வெளியிட்ட பதிவு ஒன்றில் ஜனாதிபதியை கொலை செய்வதற்கான நேரம் வந்துவிட்டது, முதலில் ஜோ, பிறகு கமலா என குறிப்பிட்டிருந்தார்.

அதுமட்டுமல்லாமல் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பிற்கு எதிராக கிரிமினல் வழக்கு ஒன்றை தொடர்ந்த மன்ஹாட்டன் மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஆல்வின் ப்ராக் என்பவரையும் கொல்லப் போவதாக கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து ஜனாதிபதி ஜோ பைடன் உடா மாநிலத்திற்கு வருகை தருவதால் தனது எம்24 ஸ்னைப்பர் வகை துப்பாக்கியை உபயோகப்படுத்தும் காலம் வந்து விட்டது என்றும் குறித்த நபர் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த பதிவில் பலவகை துப்பாக்கிகளையும் அவர் பதிவிட்டிருந்தார்.

கைது நடவடிக்கை
இந்நிலையில் உடா மாநிலத்தில், ப்ரோவோ எனும் இடத்தில் உள்ள கொலை மிரட்டல் விடுத்த வீட்டிற்கு தேடுதல் மற்றும் கைது நடவடிக்கைகளுடன் அமெரிக்க மத்திய புலனாய்வு அதிகாரிகள் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், குறித்த கைது நடவடிக்கையில் க்ரெய்க் ராபர்ட்ஸன் சுட்டுக்கொல்லப்பட்டார் என தெரிவிக்கப்படுகிறது.

எனினும் க்ரெய்க் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான முழு விவரங்களையும் அதிகாரப்பூர்வமாக அமெரிக்க அரசு இன்னும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related post

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனிக்கு 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளர் . இன்று (11) காலை பிரண்டென்பேர்க் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .…
கொலராடோவில் நடந்த துப்பாக்கிச் சூடு -, ‘பாலஸ்தீனத்தை விடுவிப்போம்’ என்று கூச்சலிட் ட  சந்தேகநபர்

கொலராடோவில் நடந்த துப்பாக்கிச் சூடு -, ‘பாலஸ்தீனத்தை விடுவிப்போம்’ என்று கூச்சலிட்…

கொலராடோவில் இஸ்ரேலிய பணயக்கைதிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற கூட்டத்தில், “பாலஸ்தீனத்தை விடுவிப்போம்” என்று கூச்சலிட்ட ஒருவர் மொலோடோவ் காக்டெய்ல்களை வீசியதில் பலர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். டென்வரில் இருந்து சுமார்…
ட்ரம்ப் – எலான் மஸ்க் நட்பில் விரிசலா?

ட்ரம்ப் – எலான் மஸ்க் நட்பில் விரிசலா?

‘அமெரிக்க அதிபர் ட்ரம்ப், டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் இடையே மனக்கசப்போ?’ என்கிற கேள்வி நேற்று முன்தினத்தில் இருந்து உலகில் வட்டமடித்து வருகிறது. ‘ஒரு ஸ்ட்ரைட் ஆண் மற்றொரு…

Leave a Reply