பாணந்துறை ரயில்  நிலையத்தில் அதிகாரி ஊழியர் இடையே முரண்பாடு

  • local
  • October 3, 2023
  • No Comment
  • 74

ரயில்  நிலையத்தில் ரயில்வே  ஊழியர்களுக்கும் மற்றுமொரு குழுவினருக்கும் இடையில்  நேற்று திங்கட்கிழமை (02) ஏற்பட்ட மோதல் காரணமாக பாணந்துறை ரயில்  நிலைய அதிபர்,  ஊழியர் உட்பட மேலுமொருவர் காயமடைந்து  வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பாணந்துறை வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தச்  சம்பவம் தொடர்பில் தந்தையும் மகனும் சந்தேகத்தின் பேரில்  கைது செய்யப்பட்டுள்ளதாகவும் , மகன் பொலிஸ் பாதுகாப்பில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பாணந்துறை சாகர மாவத்தையில் வசிக்கும் 50 வயதுடைய ஒருவரும் 23 வயதான அவரது மகனுமே  இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ரயில் பயண சீட்டு பெறுவது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தின்   அடிப்படையில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

Related post

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…
வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில்…

Leave a Reply