சுவீடனில் உயர்கல்வி படிப்பதற்காக காத்திருக்கும் இலங்கை மாணவர்களின் நிலை

சுவீடனில் உயர்கல்வி படிப்பதற்காக காத்திருக்கும் இலங்கை மாணவர்களின் நிலை

சுவீடனில் உயர்கல்வி படிப்பதற்காக சுமார் 510 இலங்கை மாணவர்கள் அனைத்துத் தகுதிகளையும் பெற்றிருந்தாலும், நாட்டிற்குள் நுழைவதற்கு இன்னும் ஒப்புதல் பெற முடியாமல் போயுள்ளது.

இதனால் மாணவர்கள் மனவிரக்தியடைந்து நம்பிக்கையற்றவர்களாகவும் மாறியுள்ளனர் என சுவீடன் உயர்கல்வி மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இந்த மாணவர்களில் 30 முதல் 75 இலட்சம் வரை பணம் செலுத்தியவர்கள் உள்ளதாக நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சங்கத்தின் தலைவர் அரவிந்த ரத்நாயக்க தெரிவித்தார்.

சுவீடன் பல்கலைக்கழகங்கள்

“சுவீடன் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பெறுவதற்கு சுமார் 980 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 407 பேர் வீசா பெற்றுள்ளனர். ஆனால் எஞ்சியவர்களுக்கு வீசா வழங்கப்படுமா என்பதை அந்த நாடு அறிவிக்கவில்லை.

நாட்டில் சுவீடன் தூதரகம் இல்லாததால், இந்தியாவில் உள்ள டெல்லி தூதரகத்தில் இருந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மேலும், பல மாணவர்கள் டெல்லி தூதரகத்திற்குச் சென்று பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் அவர்களுக்கு இதுவரை நல்ல பதில் கிடைக்கவில்லை.

முதுகலை பட்டப்படிப்பு

சுவீடன் பல்கலைக்கழகங்களில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பித்த பல பல்கலைக்கழகங்கள் மாணவர் சேர்க்சில பல்கலைக்கழகங்கள் அவர்களின் கோரிக்கைகளை கணக்கில் எடுத்துக்கொண்டு காலத்தை நீட்டித்தது. ஆனால் சுவீடனில் குடியேற்ற நிறுவனம் ஒப்புதல் அளிக்காததால் உயர்கல்வி அனுமதிகளை இழந்துவிட்டனர்.

அத்துடன் சில மாணவர்கள் செலுத்திய பணம் திரும்ப வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.கையை நிறுத்திவிட்டனர்.

 

Related post

உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது

உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது

கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் இடம்பெற்ற உள்ள நிலையில் அதற்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 2023 (2024) ஆண்டுக்கான கல்வி பொது…
வெளிநாட்டு மருத்துவப் பட்டங்கள் தொடர்பில் வெளியான தகவல்

வெளிநாட்டு மருத்துவப் பட்டங்கள் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களின் மருத்துவ பட்டப் படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புதிய சட்டத்தை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. பிரதமரின் செயலாளர் தலைமையிலான குழு குறித்த…
கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சர் சுசிலின் அறிவிப்பு

கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சர்…

இந்த வருடம் டிசம்பரில் நடத்தப்படவிருந்த கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் (2024) மே மாதம் ஆரம்பத்தில் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில்…

Leave a Reply