சந்திராயனுக்கு நிலவில் கிடைத்துள்ள புதிய தொடர்பு: இஸ்ரோ மற்றுமொரு சாதனை

சந்திராயனுக்கு நிலவில் கிடைத்துள்ள புதிய தொடர்பு: இஸ்ரோ மற்றுமொரு சாதனை

  • world
  • August 22, 2023
  • No Comment
  • 76

சந்திராயன் 2 ஆர்பிட்டர் மற்றும் சந்திரயான் 3 லேண்டர் இடையே தொலைதொடர்பு இணைப்பு வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இதன் மூலம் சந்திராயன் 3 நிலவில் தென் துருவத்தில் இறங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

அத்துடன், சந்திராயன் 3 விண்கலத்தின் லேண்டர் நிலவு தொடர்பான புதிய படங்களை அனுப்பி உள்ளதாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர்.

இப் படங்கள் மூலமாக தரையிறக்கும் சரியான பகுதியை விஞ்ஞானிகள் முடிவு செய்ய பெரும் உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

சந்திரயான் 2 ஆர்பிட்டர்

சந்திராயன் 2 லேண்டரை தரையிறக்கும் நடவடிக்கை தோல்வி அடைந்தாலும், கடந்த 4 ஆண்டுகளாக சந்திராயன் 2 ஆர்பிட்டர் நிலவை சுற்றி வந்தது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.நிலவின் தென் துருவத்தில் ஆய்வு மேற்கொள்ள சந்திராயன் 2 கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் விண்ணில் ஏவப்பட்டது.

எனினும், பூமியின் சுற்றுவட்டப் பாதைக்குள் சந்திராயன் 2 வெற்றிகரமாக நுழைந்த போது திடீரென விக்ரம் லேண்டர் கருவியின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

சந்திராயன் 2 லேண்டரை தரையிறக்கும் நடவடிக்கை தோல்வி அடைந்தாலும், கடந்த 4 ஆண்டுகளாக சந்திரயான் 2 ஆர்பிட்டர் நிலவை சுற்றி வந்தது.குறித்த சந்திராயன் 2 ஆர்பிட்டர் மற்றும் சந்திரயான் 3 லேண்டர் இடையே தொலைதொடர்பு இணைப்பு வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ  (21.08.2023) தெரிவித்துள்ளது.

தகவல் தொடர்பு

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோவால், ஜூலை 14 ஆம் திகதி ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து எல்.வி.எம் – 3 ராக்கெட் மூலம் அனுப்பபட்ட சந்திராயன் – 3 விண்கலம் ( 23.08.2023) மாலை 6:04 மணிக்கு லேண்டர் நிலவில் தரையிறக்கப்பட உள்ளது.

23-64e3966cb525d

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினும் கைது செய்யப்படுவாரா என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமெரிக்க…
கனடாவில்   கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. கனடாவில் ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற்ற…

Leave a Reply