Express Entry: 3,200 புலம்பெயர்வோருக்கு கனடா அழைப்பு

Express Entry: 3,200 புலம்பெயர்வோருக்கு கனடா அழைப்பு

  • local
  • September 21, 2023
  • No Comment
  • 60

கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு, எக்ஸ்பிரஸ் நுழைவுத்திட்டம் வாயிலாக 3,200 புலம்பெயர்வோருக்கு அழைப்பு விடுத்துள்ளது.

மீண்டும் துவக்கப்பட்ட எக்ஸ்பிரஸ் நுழைவுத்திட்டம்

எக்ஸ்பிரஸ் நுழைவுத்திட்டத்திற்கு சிறிது இடைவெளி விடப்பட்டிருந்த நிலையில், தற்போது, மீண்டும் அது துவக்கப்பட்டுள்ளது.

உண்மையில், இந்த கோடையில் அதிக அளவில் எக்ஸ்பிரஸ் நுழைவுத்திட்டம் வாயிலாக புலம்பெயர்வோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது என்றாலும், அவை எல்லாம் பல்வேறு பிரிவுகளுக்கென தனித்தனியாக நடத்தப்பட்டன.

உதாரணமாக, மருத்துவத்துறைக்கு தனியாக, போக்குவரத்துத் துறைக்குத் தனியாக, விவசாயத் துறைக்கு தனியாக என அழைப்புகள் விடுக்கப்பட்டன.

ஆனால், தற்போது மொத்தமாக அனைத்துத் துறையினருக்குமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எக்ஸ்பிரஸ் நுழைவுத்திட்டம் என்பது என்ன?

எக்ஸ்பிரஸ் நுழைவுத் திட்டம் என்பது, சில பொருளாதார புலம்பெயர்தல் திட்டங்களின் மூலம் கனடாவின் தொழிலாளர் காலியிடங்களை நிரப்புவதற்காக, கனேடிய நிரந்தர குடியிருப்பு விண்ணப்பங்களை நிர்வகிப்பதற்காக கனேடிய அரசு பயன்படுத்தும் ஒரு அமைப்பாகும்.

எக்ஸ்பிரஸ் நுழைவுத் திட்டமானது, விண்ணப்பதாரர்களின் சுயவிவரங்களை (profiles) தரவரிசைப்படுத்தும், Comprehensive Ranking System (CRS) என்னும் புள்ளிகள் அடிப்படையிலான ஒரு திட்டத்தைப் பயன்படுத்துகிறது.

அதிக புள்ளிகள் பெறுவோர், விண்ணப்பிப்பதற்கான அழைப்பு ஒன்றைப் பெறுவார்கள் (ITA). அதைத் தொடர்ந்து அவர்கள் நிரந்தர வாழிட உரிமம் கோரி விண்ணப்பிக்கலாம்.

அதைத் தொடர்ந்து, கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு, கைரேகை முதலான விடயங்களைப் பதிவு செய்ய கேட்டுக்கொள்வதுடன், நேர்காணலுக்கு ஏற்பாடு செய்யலாம், அல்லது, மேலதிக ஆவணங்களைக் கேட்கலாம்.

உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டதென்றால், கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு, அதை உறுதி செய்யும் விதத்தில் Confirmation of Permanent Residence (COPR) என்னும் ஆவணத்தை ஒன்றை உங்களுக்கு வழங்கும்.

விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிரந்தர வாழிட உரிம விண்ணப்பதாரர்கள் landing processஐ முடிக்கலாம். நீங்கள் கனடாவுக்கு வெளியில் இருந்தால்,

கனடாவில் குடியமர்வதற்கான முதல் படிகளைத் துவங்குவதற்காக, நுழைவுக்கு முந்தைய சேவைகளை ( pre-arrival services) துவக்கலாம்.

இம்முறை, Comprehensive Ranking System (CRS) என்னும் புள்ளிகள் அடிப்படையிலான திட்டத்துக்கான குறைந்தபட்ச புள்ளிகள் 531.

Related post

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ் போதைப்பொருட்கள்  கைப்பற்றல்

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ்…

நாட்டிற்குள் நீண்ட நாட்களாக மீன்பிடி படகுகள்மூலம் கொண்டுவரப்பட்ட 23 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கடந்த 2 மாதங்களில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கடந்த ஏப்ரல் 05 ஆம்…
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது  தேவையற்றது

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது தேவையற்றது

செம்மணியில் உயிரிழந்த மக்களின் என்புக்கூடுகளை தேடிக் கடந்த காலத்தைத் தோண்டும் நடவடிக்கை, தற்போது தேவையற்ற விடயமாகும் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மாறாக, எதிர்காலத்தில் அவ்வாறான…
15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

நாளை(12) முதல் மின் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று(11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…

Leave a Reply