சட்டவிரோத ஆட்கடத்தல் தொடர்பில் அவதானம் தேவை: கமால் குணரட்ன

சட்டவிரோத ஆட்கடத்தல் தொடர்பில் அவதானம் தேவை: கமால் குணரட்ன

  • local
  • August 15, 2023
  • No Comment
  • 30

சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் இரக்கமின்றி செயற்படுவதாகவும், இது தொடர்பில் அவதானமாக செயற்படுமாறும் பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கை குறித்து பிரதேச செயலாளர்களை தெளிவூட்டும் செயற்திட்டம் ஒன்று கொழும்பில் நேற்று(14.08.2023) நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே குறித்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏழ்மையை சுரண்டும் தொழில்
மேலும், சட்டவிரோத ஆட்கடத்தல்களின் போது பாதிக்கப்பட்டவர்களின் உயிர்களை பணயம் வைத்து இலாபமீட்ட சிலர் முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இரக்கமின்றி மக்களின் ஏழ்மையை சுரண்டும் ஒர் தொழிலாளக சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கை மாறி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்திற்கும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் இடையில் சட்டவிரோத ஆட்கடத்தல்கள் தொடர்பிலான பூரண ஒருங்கிணைப்பு மிகவும் அவசியமானது என கமால் குணரட்ன தெரிவித்துள்ளார்.

Related post

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ் போதைப்பொருட்கள்  கைப்பற்றல்

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ்…

நாட்டிற்குள் நீண்ட நாட்களாக மீன்பிடி படகுகள்மூலம் கொண்டுவரப்பட்ட 23 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கடந்த 2 மாதங்களில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கடந்த ஏப்ரல் 05 ஆம்…
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது  தேவையற்றது

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது தேவையற்றது

செம்மணியில் உயிரிழந்த மக்களின் என்புக்கூடுகளை தேடிக் கடந்த காலத்தைத் தோண்டும் நடவடிக்கை, தற்போது தேவையற்ற விடயமாகும் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மாறாக, எதிர்காலத்தில் அவ்வாறான…
15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

நாளை(12) முதல் மின் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று(11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…

Leave a Reply