சட்டவிரோத ஆட்கடத்தல் தொடர்பில் அவதானம் தேவை: கமால் குணரட்ன

சட்டவிரோத ஆட்கடத்தல் தொடர்பில் அவதானம் தேவை: கமால் குணரட்ன

  • local
  • August 15, 2023
  • No Comment
  • 12

சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் இரக்கமின்றி செயற்படுவதாகவும், இது தொடர்பில் அவதானமாக செயற்படுமாறும் பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கை குறித்து பிரதேச செயலாளர்களை தெளிவூட்டும் செயற்திட்டம் ஒன்று கொழும்பில் நேற்று(14.08.2023) நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே குறித்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏழ்மையை சுரண்டும் தொழில்
மேலும், சட்டவிரோத ஆட்கடத்தல்களின் போது பாதிக்கப்பட்டவர்களின் உயிர்களை பணயம் வைத்து இலாபமீட்ட சிலர் முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இரக்கமின்றி மக்களின் ஏழ்மையை சுரண்டும் ஒர் தொழிலாளக சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கை மாறி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்திற்கும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் இடையில் சட்டவிரோத ஆட்கடத்தல்கள் தொடர்பிலான பூரண ஒருங்கிணைப்பு மிகவும் அவசியமானது என கமால் குணரட்ன தெரிவித்துள்ளார்.

Related post

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…
2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க அமைச்சர்!

2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க…

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, குறித்த…

Leave a Reply