தேங்காய் பாலின் அற்புத  நன்மைகள்

தேங்காய் பாலின் அற்புத நன்மைகள்

  • healthy
  • October 16, 2023
  • No Comment
  • 38

தேங்காயை அரைத்து அதிலிருந்து பிரிக்கப்படும் பாலில் ஏராளமான மருத்துவ நன்மைகள் நிறைந்துள்ளன.

இதில் நிறைந்துள்ள துத்தநாகம், லாரிக் அமிலம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மைகளை தருகின்றன.

மேலும் தேங்காய் பால்சாப்பிடுவதற்கு மட்டுமல்லாமல் சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பிற்கும் பயன்படுத்தப்படுகிறது.

தேங்காய் பாலை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர உடலில் பல அதிசய மாற்றங்களை காணலாம்.

கிடைக்கும் நன்மைகள்
தேங்காய் பாலில் உள்ள லாரிக் அமிலம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராளின் அளவை குறைக்கிறது. மேலும் நல்ல கொழுப்புகளை அதிகரிப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

தேங்காய் பால் குடிப்பது நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்திருப்பதன் மூலம் அதிகப்படியான உணவு உட்கொள்ளை கட்டுப்படுத்துகிறது.எனவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு தேங்காய் பால் சிறந்த பலன்களை கொடுக்கும்.

தேங்காய் பாலில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள், உடலில் இன்சுலின் உற்பத்தியை மேம்படுத்துகின்றன. இது இரத்த சர்க்கரையின் அளவுகளை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

தேங்காய் பாலை வெறும் வயிற்றில் குடித்து வர வாய் மற்றும் வயிற்றுப் புண்களை குணப்படுத்தலாம்.

இதில் உள்ள ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி அல்சர் பண்புகள் புண்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராட உதவுகின்றன.

தேங்காய் பாலில் உள்ள பண்புகள் மூளைக்கு தேவையான ஆற்றலை கொடுக்கிறது. இது நினைவாற்றலை மேம்படுத்த உதவும்.

தேங்காய் பாலில் உள்ள ஆன்டி செப்டிக் பண்புகள் உடலில் ஏற்படும் நோய் தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகின்றன. பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்கிருமிகளின் தொற்றுகளிலிருந்து உடலை பாதுகாத்துக் கொள்ளவும் உதவுகின்றன.

தேங்காய்ப்பால் குடிப்பதன் மூலம் வயிற்றுப்போக்கு போன்ற செரிமான பிரச்சனைகளையும் தடுக்கலாம்.

தேங்காய் பாலில் நிறைந்துள்ள இரும்புச்சத்து இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. இதைத்தொடர்ந்து உணவில் சேர்த்து வர இரத்த சோகையையும் தடுக்கலாம்.

Related post

நோய் எதிர்ப்பு சக்தி தரும் பெரிய நெல்லிக்காய்

நோய் எதிர்ப்பு சக்தி தரும் பெரிய நெல்லிக்காய்

“நெல்லிக்காய் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும். உடம்பில் இருக்கிற ரணங்களை சீக்கிரமாக ஆற்றும். வயிற்றுப் புண்களைக் குணமாக்கும். இதயத்துக்கும் நல்லது. நோய்த்தொற்றுகள் வராமல் காக்கும். நம் உடம்பில்…
அசைவத்திலிருந்து சைவ உணவுக்கு மாறியதும் உடல் எடை அதிகரிப்பது ஏன்?

அசைவத்திலிருந்து சைவ உணவுக்கு மாறியதும் உடல் எடை அதிகரிப்பது ஏன்?

அசைவ உணவுகள் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது சாதம், காய்கறிகள் இவற்றுடன் சிக்கன், முட்டை, மீன் என புரதச்சத்து நிறைந்த உணவுகளைப் பிரதானமாக சாப்பிட்டுப் பழகியிருப்பீர்கள். புரோட்டீன் அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிடும்போது அடிக்கடி…
இந்த உணவுகளை சூடுபடுத்தி சாப்பிடவே கூடாது

இந்த உணவுகளை சூடுபடுத்தி சாப்பிடவே கூடாது

வீட்டில் உணவு மீதமானால், அதை பிரிட்ஜில் வைத்து , பிறகு மீண்டும் அதை சூடாக்கி சாப்பிடும் வழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவதால், அதில்…

Leave a Reply