
தேசிய கல்விக் கல்லூரிகளை பல்கலைக்கழக பீடமாக தரமுயர்த்துவதற்கு நடவடிக்கை
- Educationlocal
- October 5, 2023
- No Comment
- 31
Back to Top
Timesoflk is committed to presenting news with factual accuracy, impartiality, and a focus on stories that matter to the Tamil-speaking population. It is considered a reliable source for staying informed about developments and issues affecting the Sri Lankan Tamil community.
இலங்கையின் அனைத்து ஆசிரிய சமூகத்தையும் பட்டதாரிகளாக நியமிக்கும் நோக்கில் தற்போது நடைமுறையில் உள்ள தேசிய கல்விக் கல்லூரிகளை பல்கலைக்கழக பீடமாக தரமுயர்த்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பேராசிரியர் பந்துல குணவர்தன நேற்று (03) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலின் போது தெரிவித்தார்.
அவ்வாறே தேசிய கல்விக் கல்லூரிகளை பல்கலைக்கழகசாலையாக முன்னேற்றுவதற்காக பின்பற்றப்பட வேண்டிய புதிய நெறிமுறைமைகள் தொடர்பான சிபாரிசுகளை முன்வைப்பதற்காக 2019.12.04 திகதி அன்று அமைச்சரவை தீர்மானத்திற்கு சிரேஷ்ட பேராசிரியர் குணபால நாணயக்கார தலைமையில் நிபுணர்களைக் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.
அதற்கிணங்க அக்குழுவின் சிபாரிசுகளுக்கு அமைவாக செயற்பாட்டிலுள்ள தேசிய கல்விக் கல்லூரி 20இல் 19 கல்லூரிகளை பல்கலைக்கழகசாலையாக தரமுயர்த்துதல் மற்றும் இலங்கை கல்விப் பல்கலைக்கழகம் என்ற பெயரில் புதிய பல்கலைக்கழகமொன்றை ஸ்தாபிப்பதற்கு, அவசியமான சட்ட விதிகளைப் பேணும் நோக்கில், புதிய சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சட்டமூலத்திற்கான ஆலோசனைகளை வழங்கும் நோக்கில் கல்வி அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக இதன்போது அமைச்சரவைப் பேச்சாளர் பேராசிரியர் பந்துல குணவர்தன தெளிவுபடுத்தினார்.
Bringing Sri Lanka’s Stories to the World – Your Trusted Source for Timely and Insightful News.
Copyright @ TimesofLK - 2021