லிட்ரோ உள்நாட்டு எரிவாயுவின் விலை அதிகரிப்பு

லிட்ரோ உள்நாட்டு எரிவாயுவின் விலை அதிகரிப்பு

  • local
  • October 5, 2023
  • No Comment
  • 29

லிட்ரோ உள்நாட்டு எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள லிட்ரோ தலைமையகத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே லிட்ரோ தலைவர் இதனைத் தெரிவித்தார்

இந்த அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி,

12.5 கிலோ 343 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை 3,470 ரூபா

5 கிலோ 137 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை 1,393 ரூபா

2.3 கிலோ 63 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை 650 ரூபா

உலக சந்தையில் நிலவும் தற்போதைய விலைகளைக் கருத்தில் கொண்டு, விலை திருத்தச் சூத்திரத்தின்படி, பின்வரும் விலை திருத்தம் அமுல்படுத்தப்பட்டது.

இறுதியாக கடந்த மாதம் 4ஆம் திகதி லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை திருத்தப்பட்டது.

இதற்கமைய 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலை 145 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு மூவாயிரத்து 127 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதுடன், 5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலை 58 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, ஆயிரத்து 256 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.

அதேநேரம் 2.3 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 26 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 587 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related post

டேன் பிரியசாத் கொலை – இரு சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டனர்

டேன் பிரியசாத் கொலை – இரு சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டனர்

சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் கொல்லப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 2 சந்தேகநபர்களும் சாட்சியாளர்களால் இன்று அடையாளங்காட்டப்பட்டனர். இதற்கான அடையாள அணிவகுப்பு கொழும்பு பிரதான நீதவான்…
கொட்டாஞ்சேனை மாணவியின் மரணத்துடன் தொடர்புடைய ஆசிரியருக்கு கட்டாய  விடுமுறை

கொட்டாஞ்சேனை மாணவியின் மரணத்துடன் தொடர்புடைய ஆசிரியருக்கு கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனை சிறுமியின் மரணத்துடன் தொடர்புடைய ஆசிரியர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார். குறித்த ஆசிரியரைக் கட்டாய விடுமுறையில் அனுப்பியுள்ளதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. காவல்துறையால் வழங்கப்பட்ட B அறிக்கையின் பிரகாரம்…
ஆசிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் நிறைவேற்று சபைக்கூட்டம் இன்று

ஆசிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் நிறைவேற்று சபைக்கூட்டம் இன்று

ஆசிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் சங்கத்தின் நிறைவேற்று சபைக்கூட்டம் இன்று(09) கூடுகின்றது. பிலிப்பைன்ஸின் மணிலா நகரில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது. இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்னாயக்க…

Leave a Reply