தேசிய கல்விக் கல்லூரிகளை பல்கலைக்கழக பீடமாக தரமுயர்த்துவதற்கு நடவடிக்கை

தேசிய கல்விக் கல்லூரிகளை பல்கலைக்கழக பீடமாக தரமுயர்த்துவதற்கு நடவடிக்கை

இலங்கையின் அனைத்து ஆசிரிய சமூகத்தையும் பட்டதாரிகளாக நியமிக்கும் நோக்கில் தற்போது நடைமுறையில் உள்ள தேசிய கல்விக் கல்லூரிகளை பல்கலைக்கழக பீடமாக தரமுயர்த்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பேராசிரியர் பந்துல குணவர்தன நேற்று (03) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலின் போது தெரிவித்தார்.

அவ்வாறே தேசிய கல்விக் கல்லூரிகளை பல்கலைக்கழகசாலையாக முன்னேற்றுவதற்காக பின்பற்றப்பட வேண்டிய புதிய நெறிமுறைமைகள் தொடர்பான சிபாரிசுகளை முன்வைப்பதற்காக 2019.12.04 திகதி அன்று அமைச்சரவை தீர்மானத்திற்கு சிரேஷ்ட பேராசிரியர் குணபால நாணயக்கார தலைமையில் நிபுணர்களைக் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.
அதற்கிணங்க அக்குழுவின் சிபாரிசுகளுக்கு அமைவாக செயற்பாட்டிலுள்ள தேசிய கல்விக் கல்லூரி 20இல் 19 கல்லூரிகளை பல்கலைக்கழகசாலையாக தரமுயர்த்துதல் மற்றும் இலங்கை கல்விப் பல்கலைக்கழகம் என்ற பெயரில் புதிய பல்கலைக்கழகமொன்றை ஸ்தாபிப்பதற்கு, அவசியமான சட்ட விதிகளைப் பேணும் நோக்கில், புதிய சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சட்டமூலத்திற்கான ஆலோசனைகளை வழங்கும் நோக்கில் கல்வி அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக இதன்போது அமைச்சரவைப் பேச்சாளர் பேராசிரியர் பந்துல குணவர்தன தெளிவுபடுத்தினார்.

Related post

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…
வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில்…

Leave a Reply