கந்தளாய் பகுதியில் காட்டு யானையொன்று மர்மமான முறையில் உயிரிழப்பு

கந்தளாய் பகுதியில் காட்டு யானையொன்று மர்மமான முறையில் உயிரிழப்பு

  • local
  • August 29, 2023
  • No Comment
  • 19

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவிற்கு உட்டபட்ட பகுதியில் காட்டு யானையொன்று மர்மான முறையில் உயிரிழந்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அப்பகுதியில் மாடு மேய்க்கச் சென்றவர்களால் நேற்று (28.08.2023) வழங்கப்பட்ட தகவலுக்கமைய யானை உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

யானை தொடர்பான விசாரணை
குறித்த காட்டு யானை பத்து வயது தொடக்கம் பதின்மூன்று வயது உடையதாக இருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.காட்டு யானை இறந்துள்ளமை தொடர்பாக வனஜீவராசி அலுவலகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த யானை நோய் வாய்ப்பட்டு இறந்துள்ளதா அல்லது வேறு காரணங்களினால் இறந்துள்ளதா என்பது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related post

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…
2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க அமைச்சர்!

2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க…

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, குறித்த…

Leave a Reply