கனேடிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனேடிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

  • world
  • August 15, 2023
  • No Comment
  • 50

கனடாவின் கல்கரி பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் கடுமையான வெப்பநிலை நிலவும் எனவும் இது தொடர்பில் மக்கள் கூடுதல் அவதானம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கனேடிய சுற்றாடல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த நிறுவனம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

பகல் நேரத்தில் முப்பது பாகை செல்சியஸ்சை விடவும் அதிகமான வெப்பநிலை நீடிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ச்சியாக நான்கு நாட்களுக்கு இந்த வெப்பநிலை அதிகரிப்பு காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புற ஊதா கதிர்களின் வீழ்ச்சி

எச்சரிக்கை விடுக்கப்படும் பிராந்தியங்களில் வாழ்வோர், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் சுகாதார நிலை குறித்து கவனம் செலுத்த வேண்டும் எனவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக வெப்பநிலை காரணமாக நோய்வாய்ப்படக்கூடியவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த பிரதேச மக்கள் திறந்தவெளியில் இருப்பதனை தவிர்த்து அதிக அளவு நீரை பருகுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சிறுவர்கள் மற்றும் செல்லப்பிராணிகளை வாகனங்களில் தனித்து விட்டு நீண்ட நேரத்திற்கு வெளியே செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு, எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு புற ஊதா கதிர்களின் வீழ்ச்சி அளவும் அதிகமாக காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related post

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கொண்டு வந்துள்ள, வரி மற்றும் செலவு யோசனைக்கு, ஈலோன் மஸ்க் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதற்கிடையே, ட்ரம்பின் இந்த யோசனை அமெரிக்க செனட்…
இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பமான நாள் இதுவாகும், மேலும் வெப்பநிலை தொடர்ந்து பதிவு செய்யப்படுவதால், இது குறித்த புதுப்பிப்புகள்உறுதியாகவும் வேகமாகவும் பெறப்படுகின்றன. சமீபத்திய அதிகபட்ச வெப்பநிலை கென்ட்டின்…
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனிக்கு 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளர் . இன்று (11) காலை பிரண்டென்பேர்க் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .…

Leave a Reply