பிரித்தானிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

பிரித்தானிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

  • world
  • August 7, 2023
  • No Comment
  • 69

பிரித்தானியாவுக்கு புயல் தொடர்பில் வானிலை ஆராய்ச்சி மையம் பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.ஆண்டனி புயல் என பெயரிடப்பட்டுள்ள புயல் பிரித்தானியாவை தாக்கியுள்ளது. 

மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை

லண்டன் உட்பட தென்கிழக்கு இங்கிலாந்தில் விடுக்கப்பட்டுள்ள இடியுடன் கூடிய மழைக்கான மஞ்சள் எச்சரிக்கைகள் 22:00 BST உடன் முடிவடையும் எனவும், கார்டிஃப் மற்றும் பாத் உள்ளிட்ட மேற்குப் பகுதிகளில் மஞ்சள் காற்று எச்சரிக்கை ஞாயிற்றுக்கிழமை வரை ஒரே இரவில் காற்றின் வேகம் குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அத்துடன், தென்மேற்கு இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு காற்று தொடர்பில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மணிக்கு 65 கிலோமீற்றர் வேகம் வரையில் பலத்த காற்று வீசலாம் என்றும், காற்றில் பறக்கும் பொருட்களால் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.எனவே பொது மக்கள் வாகனங்களில் வெளியில் செல்லவோ அல்லது தேவையற்ற பயணங்களை மேற்கொள்ளவோ வேண்டாம் என்றும், வாகன சாரதிகள் கவனத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினும் கைது செய்யப்படுவாரா என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமெரிக்க…
கனடாவில்   கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. கனடாவில் ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற்ற…

Leave a Reply