பருத்தித்துறை பகுதியில் துப்பாக்கிசூடு – ஒருவர் படுகாயம்

பருத்தித்துறை பகுதியில் துப்பாக்கிசூடு – ஒருவர் படுகாயம்

  • local
  • October 10, 2023
  • No Comment
  • 56

பருத்தித்துறை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபர் மீதே இவ்வாறு துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அல்வாய் பகுதியில் இன்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் அருமைராசா சிந்துஜன் (வயது 27) எனும் நபர் காயமடைந்துள்ளார்.

வாள்வெட்டு, திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் குறித்த நபரை பொலிஸார் கைது செய்ய முயன்ற போது அவர் பொலிஸாரை தாக்கி தப்பிச் செல்ல முயன்றுள்ள நிலையில், இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Related post

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ் போதைப்பொருட்கள்  கைப்பற்றல்

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ்…

நாட்டிற்குள் நீண்ட நாட்களாக மீன்பிடி படகுகள்மூலம் கொண்டுவரப்பட்ட 23 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கடந்த 2 மாதங்களில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கடந்த ஏப்ரல் 05 ஆம்…
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது  தேவையற்றது

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது தேவையற்றது

செம்மணியில் உயிரிழந்த மக்களின் என்புக்கூடுகளை தேடிக் கடந்த காலத்தைத் தோண்டும் நடவடிக்கை, தற்போது தேவையற்ற விடயமாகும் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மாறாக, எதிர்காலத்தில் அவ்வாறான…
15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

நாளை(12) முதல் மின் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று(11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…

Leave a Reply