நாட்டில் கடும் வறட்சி: இலட்சக்கணக்கானோர் பாதிப்பு

நாட்டில் கடும் வறட்சி: இலட்சக்கணக்கானோர் பாதிப்பு

  • local
  • August 24, 2023
  • No Comment
  • 65

நாட்டில் நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக இதுவரை 18 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரை 81 ஆயிரத்து 162 குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 80 ஆயிரத்து 247 பேர் பாதிப்படைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் 18 ஆயிரத்து 992 குடும்பங்களைச் சேர்ந்த 63 ஆயிரத்து 269 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நிலத்தடி நீர்
அத்துடன் ஊவா மாகாணத்தின், மொனராகலை மற்றும் பதுளை மாவட்டங்களில் 6 ஆயிரத்து 253 குடும்பங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்து 52 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மத்திய மாகாணத்தில் 6 ஆயிரத்து 367 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 21 ஆயிரத்து 930 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் நிலத்தடி நீருக்கும பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதுவரை பெறப்பட்ட நீர் மாதிரிகளின் படி, எந்தவொரு நிலத்தடி நீரும் அருந்துவதற்கு உகந்தது அல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related post

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…
வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில்…

Leave a Reply