உக்ரைனுக்கு F-16 போர் விமானங்கள்: கூட்டிணையும் இரு நாடுகள்

உக்ரைனுக்கு F-16 போர் விமானங்கள்: கூட்டிணையும் இரு நாடுகள்

  • world
  • August 21, 2023
  • No Comment
  • 68

நெதர்லாந்தில் இருந்து F-16 போர் விமானங்களை பெற்றுக்கொள்வதற்காக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டேவை சந்தித்துள்ளார்.

உக்ரைன் இராணுவத்திற்காக நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட அதிநவீன போர் விமானம் அமெரிக்காவின் ஒப்புதலுடன் நாட்டை வந்தடைந்துள்ளதாக குறித்த சந்திப்பின்போது ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்க நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டவுடன் உக்ரைனுக்கு F -16 விமானங்களை வழங்க தீர்மானித்துள்ளதாக டென்மார்க் மற்றும் நெதர்லாந்து ஆகிய அரசாங்க ஒப்புதல் வழங்கியிருந்தன.

நெதர்லாந்து டென்மார்க் கூட்டணி
இதன் பிரகாரம் இரு நாடுகளும் தற்போது உக்ரைனுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளன.இதற்கமைய உக்ரைனுக்கு ஆதரவு வழங்க நெதர்லாந்து மற்றும் டென்மார்க் அரசாங்கங்கள் ஒரு கூட்டணியில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உக்ரைன் விமானிகளுக்கான பயிற்சி நடவடிக்கைகள் இம்மாதம் ஆரம்பிக்கப்படும் என டென்மார்க் பாதுகாப்பு அமைச்சர் ஜாகோப் எல்லெமன்-ஜென்சன் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த வார தொடக்கத்தில் டென்மார்க் மற்றும் நெதர்லாந்து தலைவர்களுக்கு எழுதிய கடிதத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் அந்தோனி பிளிங்கன் இந்த ஒப்புதலுக்கான விடயங்களை சுட்டிக்காட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினும் கைது செய்யப்படுவாரா என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமெரிக்க…
கனடாவில்   கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. கனடாவில் ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற்ற…

Leave a Reply