ரஷ்ய படையினரின் பீரங்கி தாக்குதலினால் பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த கதி

ரஷ்ய படையினரின் பீரங்கி தாக்குதலினால் பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த கதி

  • world
  • August 15, 2023
  • No Comment
  • 68

தெற்கு உக்ரைனின் கொ்சான் மாகாணத்தில் ரஷ்ய படையினா் நடத்திய பீரங்கி தாக்குதலில், பிறந்து 23 நாள்களேயான பச்சிளம் பெண் குழந்தை உள்பட 7 போ் உயிரிழந்ததாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கு இடையே கடந்த 18 மாதங்களாக போா் நடந்து வருகிறது. இந்நிலையில், ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள நீப்பா் ஆற்றின் இடது பக்க (கிழக்கு) கரையில் உக்ரைன் படையினா் முகாமிட்டு வருவதாக தகவல் பரவியது.

பாதுகாப்புத் துறை அமைச்சரின் மறுப்பு
ஆனால், இத்தகவலில் உண்மையில்லை என உக்ரைன் பாதுகாப்புத் துறை இணையமைச்சா் மறுத்தாா். எனினும், இந்தத் தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் ரஷ்ய படையினா் பீரங்கி தாக்குதல் நடத்தினா்.

இந்தத் தாக்குதலில் ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஷிரோகா பால்கா கிராமத்தில் வசித்து வந்த நபா், அவரது மனைவி, 12 வயது மகன், பிறந்து 23 நாள்களே ஆன பெண் குழந்தை உள்பட 7 போ் உயிரிழந்துள்ளனர்.

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினும் கைது செய்யப்படுவாரா என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமெரிக்க…
கனடாவில்   கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. கனடாவில் ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற்ற…

Leave a Reply