தீவிரமடையும் ரஷ்ய வெடிகுண்டு தாக்குதல்: தொடரும் ஏவுகணை தாக்குதல்

தீவிரமடையும் ரஷ்ய வெடிகுண்டு தாக்குதல்: தொடரும் ஏவுகணை தாக்குதல்

  • world
  • August 14, 2023
  • No Comment
  • 71

உக்ரைன் – ரஷ்ய போர் மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில் இன்று ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் பிறந்து 23 நாட்களேயான குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

ரஷ்யாவிற்கு பதிலடியாக கெர்சனின் மேற்கு பகுதிகளை கடந்த நவம்பர் மாதம் மீண்டும் உக்ரைன் படைகள் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தனர்.

இந்நிலையில், டினிப்ரோ ஆற்றின் கரைக்கு அப்பால் இருந்து அப்பகுதிகளை ரஷ்ய வீரர்கள் தொடர்ந்து ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.ரஷ்யா வெடிகுண்டு தாக்குதல்
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை கெர்சனின் ஷிரோகா பால்கா கிராமத்தில் உள்ள வீடொன்றின் மீது ரஷ்யா வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக உள்துறை அமைச்சர் இகோர் கிளிமென்கோ தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலில் பிறந்து 23 நாட்களேயான குழந்தை மற்றும் அவரது 12 வயது சகோதரர் மற்றும் அவரது பெற்றோர் என மொத்தம் 7 பேர் ரஷ்யாவின் இந்த வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.

ஸ்டானிஸ்லாவ் அருகே உள்ள மற்றொரு கிராமத்திலும் ரஷ்யாவின் தாக்குதலால் 2 பேர் உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தீவிரவாதிகள் கட்டாயமாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும், அவர்கள் படைகள் கொண்டு தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என கிளிமென்கோ குறிப்பிட்டுள்ளார்.

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினும் கைது செய்யப்படுவாரா என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமெரிக்க…
கனடாவில்   கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. கனடாவில் ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற்ற…

Leave a Reply