இலங்கையில் விமான நிலையங்களுக்கு அருகில் வசிப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

இலங்கையில் விமான நிலையங்களுக்கு அருகில் வசிப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

  • local
  • August 4, 2023
  • No Comment
  • 116

இலங்கையில் விமான நிலையங்களுக்கு அருகில் வசிப்போருக்கு முக்கிய அறிவித்தல் ஒன்றை வரையறுக்கப்பட்ட விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனம்  (இலங்கை) விடுத்துள்ளது.

அதாவது விமான நிலைய சுற்றி சுமார் 5km சுற்றுவட்டத்தில் வசிப்போருக்கு பட்டம் விடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த அறிவித்தல் முக்கியமாக இலங்கையில் இயங்கும் 5 விமான நிலையங்களுக்கு அருகில் வசிப்போருக்கு விடுக்கப்பட்டுள்ளது.

பாரிய சேதங்களை விளைவிக்கும் சாத்தியம்

அவையாவன, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், மத்தள விமான நிலையம், மட்டக்களப்பு சர்வதேச விமான நிலையம், யாழ் சர்வதேச விமான நிலையம் மற்றும் கொழும்பு சர்வதேச விமான நிலையம் ஆகும்.மேற்குறிப்பிடப்பட்ட விமான நிலைய சுற்றுப்பரப்பினுள் பட்டம் விடுவதன் காரணமாக விமான ஓட்டுநர்களுக்கு சிரமம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில வேளைகளில் பட்டங்கள் விமான விசிறிக்குள் சிக்கும் பட்சத்தில் அவை பாரிய சேதத்தை விளைவிக்க வாய்ப்பு அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Related post

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…
வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில்…

Leave a Reply