கடுவளை கொலையுடன் தொடர்புடைய மூவர் கைது

கடுவளை கொலையுடன் தொடர்புடைய மூவர் கைது

  • local
  • August 4, 2023
  • No Comment
  • 22

கடுவளை 8 ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற கொலையுடன் தொடர்புடைய 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் அடையாளம் தெரியாத சடலமொன்று காணப்படுவதாக கடுவளை பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேகநபர்கள் மற்றும் உயிரிழந்த நபருக்கு இடையில் காணப்பட்ட தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

குறித்த நபரை கடத்திச் சென்ற சந்தேகநபர்கள், முல்லேரியா பகுதியில் வைத்து தாக்கி கொலை செய்து பின்னர் முச்சக்கர வண்டியில் கடுவளை 8 ஆம் கட்டை பகுதியில் சடலத்தை விட்டுச் சென்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேல் மாகாணத்தின் தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் வெல்லம்பிட்டி மற்றும் அங்கொடை பிரதேசங்களை சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளுக்கமைய கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி, வயர், மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி ஆகியன மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related post

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…
2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க அமைச்சர்!

2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க…

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, குறித்த…

Leave a Reply