
கடுவளை கொலையுடன் தொடர்புடைய மூவர் கைது
- local
- August 4, 2023
- No Comment
- 22
Back to Top
Timesoflk is committed to presenting news with factual accuracy, impartiality, and a focus on stories that matter to the Tamil-speaking population. It is considered a reliable source for staying informed about developments and issues affecting the Sri Lankan Tamil community.
கடுவளை 8 ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற கொலையுடன் தொடர்புடைய 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் அடையாளம் தெரியாத சடலமொன்று காணப்படுவதாக கடுவளை பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேகநபர்கள் மற்றும் உயிரிழந்த நபருக்கு இடையில் காணப்பட்ட தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
குறித்த நபரை கடத்திச் சென்ற சந்தேகநபர்கள், முல்லேரியா பகுதியில் வைத்து தாக்கி கொலை செய்து பின்னர் முச்சக்கர வண்டியில் கடுவளை 8 ஆம் கட்டை பகுதியில் சடலத்தை விட்டுச் சென்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேல் மாகாணத்தின் தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் வெல்லம்பிட்டி மற்றும் அங்கொடை பிரதேசங்களை சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளுக்கமைய கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி, வயர், மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி ஆகியன மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Bringing Sri Lanka’s Stories to the World – Your Trusted Source for Timely and Insightful News.
Copyright @ TimesofLK - 2021