
இங்கிலாந்துக்கான விசா கட்டணம் 15% ஆல் உயர்வு
- world
- October 6, 2023
- No Comment
- 19
Back to Top
Timesoflk is committed to presenting news with factual accuracy, impartiality, and a focus on stories that matter to the Tamil-speaking population. It is considered a reliable source for staying informed about developments and issues affecting the Sri Lankan Tamil community.
இங்கிலாந்து செல்வோருக்கான விசா கட்டணங்களை அந்நாட்டு அரசு 15 முதல் 20% வரை அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவிலிருந்து இங்கிலாந்து செல்லும் மாணவர்கள் கூடுதலாக 13 ஆயிரம் ரூபாய் வரை செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
உலகின் மிகவும் வளமிக்க நாடுகளில் ஒன்றாக கருதப்படும் இங்கிலாந்து நாட்டிற்கு செல்ல உலகம் முழுவதும் உள்ள மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குறிப்பாக இந்தியாவில் இருந்து கல்வி பயில்வதற்காகவும், மருத்துவம் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவதற்காகவும் ஏராளமானோர் இங்கிலாந்து நாட்டின் விசா கோரி ஆண்டுதோறும் விண்ணப்பித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு இங்கிலாந்தின் பிரதமராக ரிஷி சுனக் பதவி ஏற்ற பின்னர், விசா கட்டணங்களை 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரிப்பது என முடிவு செய்தார்.
இதன் மூலமாக இங்கிலாந்து நாட்டின் பொதுத்துறை ஊழியர்களுக்கு ஊதியம் அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக அவர் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த கூடுதல் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்ததுள்ளது.
6 மாதத்திற்கும் குறைவாக இங்கிலாந்தில் இருக்க விரும்புவோர் 115 பவுண்டுகள் விசா கட்டணமாக செலுத்த வேண்டி இருக்கும்.
வெளிநாடுகளில் இருந்து இங்கிலாந்துக்கு செல்லும் மாணவர்கள் ஏற்கெனவே இருந்த 363 பவுண்டுகளுக்கு பதிலாக 490 பவுண்டுகள் விசா கட்டணமாக செலுத்த வேண்டும். இது 127 பவுண்டுகள் அதிகமாகும்.இந்திய மதிப்பில் இது சுமார் 13 ஆயிரம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று வேலைக்காக செல்வோர் மற்றும் இங்கிலாந்திலேயே குடியிருக்க விரும்புவோர் செலுத்த வேண்டிய கட்டணங்களும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.
Bringing Sri Lanka’s Stories to the World – Your Trusted Source for Timely and Insightful News.
Copyright @ TimesofLK - 2021