ஆன்மீக சிகிச்சை என்ற பெயரில் வன்கொடுமை – பெண்கள் இரையாவது எப்படி? பிபிசி புலனாய்வு

ஆன்மீக சிகிச்சை என்ற பெயரில் வன்கொடுமை – பெண்கள் இரையாவது எப்படி? பிபிசி புலனாய்வு

  • world
  • August 10, 2023
  • No Comment
  • 29

ஆன்மீக சிகிச்சையாளர்கள் என்று தங்களைத் தாங்களே அடையாளப்படுத்தி கொள்பவர்கள், பல்வேறு பிரச்னைகளுடன் தங்களை நாடி வரும் பெண்களை பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கி வருகின்றனர் என்பது பிபிசி அரபு சேவைகளின் கள ஆய்வு மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

‘குர்ஆன் குணப்படுத்துதல்’ என்று அழைக்கப்படும் ஆன்மீக சிகிச்சையானது அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளில் பிரபலமான நடைமுறையாக இருந்து வருகிறது.

‘ஜின்’ எனப்படும் தீய ஆவிகளை தங்களின் உடம்பில் இருந்து வெளியேற்றுவதன் மூலம் நோய்களுக்கும், மன ரீதியான பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என்று நம்பி, ஆன்மீக சிகிச்சை மேற்கொள்பவர்களை நாடி பெரும்பாலான பெண்கள் செல்கின்றனர்.

இவ்வாறு மொராக்கோ மற்றும் சூடான் நாடுகளில் ஆன்மீக சிகிச்சைக்கு சென்ற பெண்களில் 85 பேருக்கு அங்கு பாலியல் ரீதியாக நேர்ந்த பல்வேறு கசப்பான அனுபவங்கள் குறித்து, கடந்த ஓராண்டுக்கு மேல் பிபிசி நடத்திய கள ஆய்வில் ஆதாரங்களுடன் கூடிய பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன. இவற்றில் முக்கியமாக, ஆன்மீக சிகிச்சை என்ற பேரில் 65 பேர், தங்களிடம் சிகிச்சைக்கு வந்த பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளி உலகிற்கு தெரிய வந்துள்ளது.

ஆன்மீக சிகிச்சையாளர்கள் மீதான இந்தப் பாலியல் குற்றச்சாட்டுகளை உறுதி செய்ய தன்னார்வ நிறுவனங்கள், வழக்கறிஞர்கள், பெண்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன், மாதக்கணக்கில் பிபிசி உரையாடியது.

அத்துடன் பிபிசி பெண் பத்திரிகையாளர் ஒருவர், தன்னுடைய அடையாளத்தை வெளிப்படுத்தி கொள்ளாமல், ஆன்மீக சிகிச்சைக்கு சென்றபோது, சிகிச்சையாளர் ஒருவர் அவரிடமும் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்தார்.

இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள சில விவரங்கள் வாசகர்களுக்கு வருத்தம் அளிப்பதாக இருக்கலாம்.

தலால் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மொராக்கோ நாட்டைச் சேர்ந்த பெண், சில ஆண்டுகளுக்கு முன், காசா பிளாங்கா நகருக்கு அருகில் செயல்பட்டு வந்த ஓர் ஆன்மீக சிகிச்சையாளரிடம் மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்றார். அப்போது சுமார் 25 வயது பெண்ணாக இருந்த தலாலை, ‘ஜின் காதலன்’ என்ற தீய சக்தி ஆட்கொண்டுள்ளதன் விளைவாகவே, அவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக சிகிச்சையாளர் கூறியுள்ளார்.

அத்துடன் தலாலை தனிமையில் அழைத்து சிகிச்சை அளித்த அந்த நபர், தீய சக்தியை விரட்ட, கஸ்தூரி என்ற வாசனை திரவியத்தை நுகர சொல்லி உள்ளார். அதை நுகர்ந்ததும் தலால் சுயநினைவை இழந்ததால், அது ஒருவித போதைப்பொருளாக தான் இருந்திருக்கும் என்று பிபிசி கள ஆய்வு குழுவிடம் தெரிவித்தார்.

Related post

போரில் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களின் நினைவாக வேல்ஸ் இளவரசி அஞ்சலி .

போரில் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களின் நினைவாக வேல்ஸ் இளவரசி அஞ்சலி .

இளவரசர் வில்லியமும் கேத்தரினும் அபேயை விட்டு வெளியேறி, கிரேட் வெஸ்ட் டோரில் உள்ள இன்னசென்ட் பாதிக்கப்பட்டவர்களின் நினைவிடத்தில் மலர்களை வைத்துள்ளனர். உலகம் முழுவதும் மரணம், சித்திரவதை மற்றும் ஒடுக்குமுறையால்…
அமெரிக்கா , பிரித்தானியா வரி குறைப்பு ஒப்பந்தம் இன்று அறிவிப்பு

அமெரிக்கா , பிரித்தானியா வரி குறைப்பு ஒப்பந்தம் இன்று அறிவிப்பு

அமெரிக்காவும் பிரித்தானியாவும் இன்று வரிகளைக் குறைப்பதற்கான ஒப்பந்தத்தை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றது முதல், பல நாடுகள் மீது பரஸ்பர வரிகளை அதிகரித்துள்ளார்.…
பாப்பரசரின் முதற்கட்ட  தெரிவு  தீர்மானம் இன்றி முடிவு .

பாப்பரசரின் முதற்கட்ட தெரிவு தீர்மானம் இன்றி முடிவு .

புதிய பரிசுத்த பாப்பரசரை தெரிவு செய்வதற்கான முதல்சுற்று வாக்கெடுப்பு தீர்மானமின்றி நிறைவடைந்துள்ளது. கத்தோலிக்க மக்கள் உள்ளிட்ட முழு உலகமும் கவனம் செலுத்தியுள்ள கொன்கிலேவ் எனப்படும் பரிசுத்த பாப்பரசரை தெரிவு…

Leave a Reply