தேர் ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி இருவர் பலி

தேர் ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி இருவர் பலி

  • local
  • August 24, 2023
  • No Comment
  • 37

பதுளை – நமுனுகுல, பூட்டவத்தை தோட்டத்தில் வருடாந்த திருவிழா உற்சவத்தில் இடம்பெற்ற தேர் ஊர்வலத்தின் போது மின்சாரம் தாக்கியதில் 02 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று(24.08.2023) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து சம்பவம்
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மேலும் மூன்று பேர் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஊர்வலத்தின் போது தேர், உயர் அழுத்த மின்கம்பியில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் ஆரம்பமான ஊர்வலம் இன்று அதிகாலை வரை நீடித்ததாகவும், தேரை கோவிலுக்கு கொண்டு செல்லும் போது, உயர் அழுத்த மின்கம்பியில் தேரின் மேல்பகுதி மோதி மின்சாரம் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், சம்பவத்தில் 30 வயது மற்றும் 42 வயதுடையவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த இருவரே உயிரிழந்தனர்.இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நமுனுகுல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related post

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ் போதைப்பொருட்கள்  கைப்பற்றல்

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ்…

நாட்டிற்குள் நீண்ட நாட்களாக மீன்பிடி படகுகள்மூலம் கொண்டுவரப்பட்ட 23 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கடந்த 2 மாதங்களில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கடந்த ஏப்ரல் 05 ஆம்…
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது  தேவையற்றது

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது தேவையற்றது

செம்மணியில் உயிரிழந்த மக்களின் என்புக்கூடுகளை தேடிக் கடந்த காலத்தைத் தோண்டும் நடவடிக்கை, தற்போது தேவையற்ற விடயமாகும் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மாறாக, எதிர்காலத்தில் அவ்வாறான…
15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

நாளை(12) முதல் மின் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று(11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…

Leave a Reply