தேர் ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி இருவர் பலி

தேர் ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி இருவர் பலி

  • local
  • August 24, 2023
  • No Comment
  • 15

பதுளை – நமுனுகுல, பூட்டவத்தை தோட்டத்தில் வருடாந்த திருவிழா உற்சவத்தில் இடம்பெற்ற தேர் ஊர்வலத்தின் போது மின்சாரம் தாக்கியதில் 02 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று(24.08.2023) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து சம்பவம்
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மேலும் மூன்று பேர் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஊர்வலத்தின் போது தேர், உயர் அழுத்த மின்கம்பியில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் ஆரம்பமான ஊர்வலம் இன்று அதிகாலை வரை நீடித்ததாகவும், தேரை கோவிலுக்கு கொண்டு செல்லும் போது, உயர் அழுத்த மின்கம்பியில் தேரின் மேல்பகுதி மோதி மின்சாரம் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், சம்பவத்தில் 30 வயது மற்றும் 42 வயதுடையவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த இருவரே உயிரிழந்தனர்.இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நமுனுகுல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related post

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…
2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க அமைச்சர்!

2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க…

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, குறித்த…

Leave a Reply