மாத்தறையில் இரு வீட்டுப்பணி பெண்கள் கொலை

மாத்தறையில் இரு வீட்டுப்பணி பெண்கள் கொலை

  • local
  • October 9, 2023
  • No Comment
  • 29

மாத்தறையில் உள்ள வீடொன்றில் வீட்டுப் பணிப்பெண்ணாக கடமையாற்றிய இரு பெண்கள் கொல்லப்பட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இவர்கள் மலம்படை மற்றும் வல்கம பிரதேசத்தைச் சேர்ந்த பெண்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அம் முறைப்பாட்டின் பிரகாரம் சனிக்கிழமை காலை வீட்டு உரிமையாளர் வீட்டை விட்டு வெளியேறி மாலையில் வீடு திரும்பிய போது வீட்டுப் பணிப்பெண்கள் இருவரையும் காணவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வீட்டுப் பணிப்பெண்கள் வீட்டில் இல்லாததால் உரிமையாளர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் நடத்திய விசாரணைகளின் போது வீட்டின் பின்பக்க கதவு திறந்திருந்தமை தெரியவந்துள்ளது.

படுகொலை செய்யப்பட்ட பெண்கள்
67 மற்றும் 70 வயதுடைய இரு பெண்களும், பணிப்பெண்கள் பயன்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட குளியலறை மற்றும் கழிவறை பகுதிகளில் படுகொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

அறை அலமாரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தங்கம்,12 வளையல்கள், 02 நெக்லஸ்கள், ஒரு தங்க கரண்டி, 39 வெளிநாட்டு நாணயங்கள் உள்ளிட்ட பல்வேறு பெறுமதியான பொருட்கள் காணாமல் போயிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சம்பவத்துடன் தொடர்புடையதாக நம்பப்படும் மாத்தறை, துடாவ பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர் வசம் இருந்த திருடப்பட்ட பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related post

சுகாதார உத்தியோகத்தர்களுக்கான புதிய  திட்டம்

சுகாதார உத்தியோகத்தர்களுக்கான புதிய திட்டம்

சுகாதார உத்தியோகத்தர்களின் உடல் மற்றும் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் விசேட திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் முதற்கட்டமாக, சுகாதார அமைச்சில் நிறுவப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தை…
மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…

Leave a Reply