நூலிழையில் உயிர் தப்பிய உக்ரைன் ஜனாதிபதி! அம்பலமாகிய சதித்திட்டம்

நூலிழையில் உயிர் தப்பிய உக்ரைன் ஜனாதிபதி! அம்பலமாகிய சதித்திட்டம்

  • world
  • August 9, 2023
  • No Comment
  • 149

உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி மீண்டும் ஒரு படுகொலை திட்டத்தில் இருந்து நூலிழையில் தப்பியுள்ளதாக நாட்டின் பாதுகாப்பு சேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை படுகொலை செய்யும் திட்டத்தில் பெண் ஒருவரை உக்ரைன் பாதுகாப்பு சேவை அதிகாரிகள் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்த நிலையில், சதித்திட்டம் அம்பலமாகியுள்ளது.

பெயர் வெளிப்படுத்தப்படாத குறித்த பெண், உக்ரைன் ஜனாதிபதியின் நகர்வுகளை, சந்திக்கும் நபர்களை, செல்லும் பகுதிகளை ரஷ்யாவுக்கு தெரியப்படுத்தி வந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனின் திட்டம்
தெற்கு மைகோலேவ் பகுதிக்கு ஜெலென்ஸ்கியின் வருகை பற்றி தகவல் தெரிவித்த நிலையில், ரஷ்யா அப்பகுதியில் வான்வழி தாக்குதலை கட்டவிழ்த்துவிட திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த நிலையில், துரோகிகளுக்கு எதிராகவும் உக்ரைன் போரிடும் என ஜெலென்ஸ்கி தமது டெலிகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீதான ட்ரோன் தாக்குதலானது ஜனாதிபதி விளாடிமிர் புடினை படுகொலை செய்யும் உக்ரைனின் திட்டம் என்றே ரஷ்யா கூறி வருகிறது.மேலும், உக்ரைன் மீதான படையெடுப்பு தொடங்கிய நாட்களில், தமது மரணத்தை புடின் விரும்புகிறார் என்பது தனக்குத் தெரியும் என்றும் ஜெலென்ஸ்கி கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினும் கைது செய்யப்படுவாரா என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமெரிக்க…
கனடாவில்   கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. கனடாவில் ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற்ற…

Leave a Reply