நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாதாந்த வீட்டு வாடகை 1000 ரூபா! வெளியானது கணக்காய்வு அறிக்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாதாந்த வீட்டு வாடகை 1000 ரூபா! வெளியானது கணக்காய்வு அறிக்கை

  • local
  • August 28, 2023
  • No Comment
  • 15

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக மாதிவெலவில் அமைக்கப்பட்டுள்ள வீட்டுத்தொகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு கடந்த 30 வருடங்களாக மாதாந்த வீட்டு வாடகையாக 1000 ரூபா மாத்திரே அறவிடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள தணிக்கை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.1993 ஆம் ஆண்டு முதல் குடியிருப்பின் நீர், மின்சாரம் மற்றும் தொலைபேசி கட்டணங்களுக்காக வைப்புத்தொகையாக அறவிடப்பட்ட ஆயிரம் ரூபா தொகை உரிய காலத்தில் திருத்தப்படவில்லை எனவும் தணிக்கை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினரொருவர் பதவி நீக்கப்பட்டவுடன் உத்தியோகபூர்வ குடியிருப்புகளை உடனடியாக காலி செய்து ஒப்படைக்க வேண்டும் என்ற போதிலும், 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் திகதிக்குள் 06 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்படி அபராதத் தொகையையும், மின்சாரம் மற்றும் நீர் கட்டணங்கள் உட்பட 455,904 ரூபாவையும் செலுத்தவில்லை எனவும் கணக்காய்வு அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related post

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…
2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க அமைச்சர்!

2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க…

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, குறித்த…

Leave a Reply