பில்லியன் கணக்கான அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட அரசாங்கம் திட்டம்

பில்லியன் கணக்கான அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட அரசாங்கம் திட்டம்

  • local
  • August 25, 2023
  • No Comment
  • 17

இரத்தினக்கற்கள் ஏற்றுமதி மூலம் 2025 ஆம் ஆண்டளவில் 2 பில்லியன் அமெரிக்க டொலர் வருடாந்த வருமானத்தை ஈட்ட எதிர்பார்ப்பதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவர் விராஜ் டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்

இந்த வருடத்தின் முதல் ஏழு மாதங்களில் இரத்தினக்கற்கள் ஏற்றுமதி மூலம் சுமார் 312 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானம் பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.சட்டவிரோத இரத்தினக்கல் ஏற்றுமதி
இதேவேளை, தேசிய இரத்தினம் மற்றும் ஆபரண ஆணையம் இந்த ஆண்டு இறுதிக்குள் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டும் என கணித்துள்ளது.

இதேவேளை, சட்டவிரோத இரத்தினக்கல் ஏற்றுமதியை கட்டுப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவது குறித்தும் அவர் கவனம் செலுத்தியுள்ளார். நாட்டிற்குள் ஏலம் விடுவதன் மூலம் வெளிநாட்டு கொள்வனவு செய்பவர்கள் நேரடியாக இரத்தினக்கற்களை கொள்வனவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும்.

இதன்படி, வெளிநாட்டு கொள்வனவு செய்பவர்கள் இந்த நாட்டில் உள்ள ஏலங்களில் நேரடியாக இரத்தினக்கற்களை கொள்வனவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என வும் தெரிவித்துள்ளார்.

Related post

சுகாதார உத்தியோகத்தர்களுக்கான புதிய  திட்டம்

சுகாதார உத்தியோகத்தர்களுக்கான புதிய திட்டம்

சுகாதார உத்தியோகத்தர்களின் உடல் மற்றும் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் விசேட திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் முதற்கட்டமாக, சுகாதார அமைச்சில் நிறுவப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தை…
மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…

Leave a Reply