தேர்தலில் மொட்டுக் கட்சிக்கே தமிழ் மக்களின் வாக்கு: பசில் ராஜபக்ச உறுதி

தேர்தலில் மொட்டுக் கட்சிக்கே தமிழ் மக்களின் வாக்கு: பசில் ராஜபக்ச உறுதி

  • local
  • August 23, 2023
  • No Comment
  • 17

நாட்டில் எந்தத் தேர்தல் நடந்தாலும் தமிழ் மக்களின் ஆணை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குக் கிடைக்கும் என்று அக்கட்சியின் நிறுவுனரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், தேர்தல் எப்போது நடக்கும் என்று என்னால் கூற முடியாது. அதற்கான அதிகாரம் என்னிடம் இல்லை.

மொட்டு அரசின் ஆட்சி
மக்கள் ஆணை இன்னமும் எமக்கு இருக்கின்றது. அதனால் தான் மொட்டு அரசின் ஆட்சி தொடர்கின்றது.

மொட்டு வீழ்ந்து விட்டது என்று எதிர்க்கட்சிகள் கனவு காணக்கூடாது.மொட்டு இன்னமும் வீரியத்துடன் எழும். மூவின மக்களையும் அரவணைத்தே நாம் பயணிப்போம்.

எந்தத் தேர்தல் நடந்தாலும் சிங்கள மக்களின் ஆணை மட்டுமல்ல தமிழ், முஸ்லிம் மக்களின் ஆணையும் மொட்டுக் கட்சிக்குக் கிடைக்கும் என தெரிவித்தார்.

Related post

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…
2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க அமைச்சர்!

2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க…

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, குறித்த…

Leave a Reply